திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை விநியோகம் செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், பார்கள், நட்சத்திர ஹோட்டல்களை மட்டுமே அனுமதி பெற்று மது விநியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை விநியோகம் செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான அனுமதி பெறக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு எடுத்த செல்வதற்கான போக்குவரத்து அனுமதியை, மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மதுவிலக்கு துணை ஆணையர்கள் வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.