கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், கள்ளச்சாராய சாவுகளை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (ஜூன் 24) சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, ஆதவ் அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.