சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க கூடுதல் பணியாளர்கள் தேவை என்று ஆணைய நீதிபதி கலையரசன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல், முறைகேடான பணி நியமனங்கள் உள்ளிட்ட புகார்கள் எழுந்ததால், அவற்றை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.
உயர்கல்வித்துறையின் உத்தரவையடுத்து, கலையரசன் சென்னையில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வாவை சந்தித்து, தாம் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப் பட்டதற்கான ஆணையை பெற்றுக் கொண்டார். மேலும், சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான முழு விவரங்கள், அதற்கான ஆதாரங்களையும் கலையரசன் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், விசாரணை ஆணையத்துக்குத் தேவையான அலுவலகம், கூடுதல் பணியாளர் களை வழங்கிடக் கோரி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவுக்கு கடிதம் எழுதி உள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.ஆணையத்துக்குத் தேவையான அலுவலகம், பணியாளர் கள் கிடைத்த உடன், முறைப்படி விசாரணையைத் தொடங்க உள்ளதாகவும் அவர் தெரி
வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.