tamilnadu

img

மதம், வெறுப்பு பிரச்சாரத்தை புறந்தள்ளுவோம் உழைக்கும் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்துவோம்

                                                                                                                                          சவால்விடும் சக்தி இடதுசாரிகளே!

திரையுலகினர் இடதுசாரி இயக்கங்களுக்கு வந்து ஆதரிப்பது பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தேர்தல் பிரச்சாரங்களில் இடதுசாரி, சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்து பேசமாட்டார்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட இடதுசாரி, குறிப்பாக சிபிஎம் வேட்பாளர்களை ஆதரித்து ஏராளமான திரைக்கலைஞர்கள் பிரச்சாரம் செய்தனர். இடதுசாரி இயக்கம் சகல தரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பிஎஸ்என்எல், வங்கி போன்ற பொதுத்துறைகளையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்குள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளின் தலைமை தாங்கும் மோடி அரசு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. அந்த அரசின் தாக்குதல்களை எதிர்க்கும் அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு இடதுசாரிகளுக்கே உள்ளது. அடுத்த சில மாதங்களில் அதிகப்படியான தாக்குதல்களை எதிர்க்கொண்டு போர்க்கோலம் பூணவேண்டிய சூழல் வரப்போகிறது. இடையில் இருப்பவர்கள் தலைமை தாங்கப்போவதில்லை. இடதுசாரிகளே சவால் விடும் சக்தியாக இருப்போம்.
1971 சிஐடியு மாநாட்டு நினைவலைகள்
1971ஆம் ஆண்டு 4வது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெற்ற போது மாணவனாக ஊர்வலத்தில் பங்கேற்றேன். அந்த நினைவலைகளோடு மாநாட்டை சிறப்பாக நடத்துவோம். தமிழக மக்களின் உணர்வுகளோடு மாநாட்டுச் செய்திகளை இணைப்போம். இந்த மாநாட்டால் எனக்கு என்ன பயன் என்ற கிராமத்தில் ஒருவர் கேட்டால் கூட எளிமையாக விளக்க வேண்டும். தமிழகத்தில் இடதுசாரி மாற்று ஏன் தேவை என்பதை உணர்த்த வேண்டும். விவசாயிகள்-தொழிலாளர் ஒற்றுமை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றினாலும், அதனை நிறைவேற்றிய பெருமை தமிழகத்திற்கே உண்டு. 35 வருடமாக சந்தா சேர்க்கிறபோது, ஒவ்வொரு தொழிலாளியிடமும் ஒரு ரூபாய் சேகரித்து விவசாயிகள் சங்கத்திற்கு சிஐடியு கொடுத்து வருகிறது. நிலப்பிரபுத்துவ கொடுமையில் 44 பேர் வெந்து மடிந்த வெண்மணி நினைவக கட்டுமானப்பணி இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. மோடி அரசின் மூர்க்கத்தனமான தாக்குதல், வேலைபறிப்பு வரும்போது அதற்கெதிரான போராட்டத்தை வீரியமாக நடத்தும் காலம் வந்து கொண்டிருக்கிறது. அதனை உறுதியாக நடத்துவோம். மாநாட்டை வெற்றிகரமாக்குவோம்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேசியதிலிருந்து)

சென்னை, ஜூலை 5- மதம், வெறுப்பு பிரச்சாரங்களை புறந்தள்ளி, தொழிலாளர்கள் என்ற அடையாளத்தோடு உழைக்கும் வர்க்கத்தை ஒன்றிணைக்கும் வகை யில் சிஐடியு அகில இந்திய மாநாடு அமையும் என்று தலைவர்கள் சூளுரைத்தனர். சிஐடியு 4வது அகில இந்திய மாநாடு 1979லும், 11வது அகில இந்திய மாநாடு 2003லும் சென்னையில் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு 2020 ஜனவரி 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கான வர வேற்புக்குழு அமைப்புக்கூட்டம் வியா ழனன்று (ஜூலை 4) சென்னையில் நடைபெற்றது. இதில் 1000 பேர் கொண்ட பிரம்மாண்டமான வர வேற்புக்குழு அமைக்கப்பட்டது.

தேர்தலும் வர்க்கப் போராட்டமே!
இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், “அமெரிக்க ஏகா திபத்தியம் தனது நெருக்கடிகளை மற்ற நாடுகள் மீது மூர்க்கத்தனமாக திணித்துக் கொண்டு இருக்கிறது. அணுஆயுதங்களை குறைப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தங்களை தன்னிச்சையாக ரத்து செய்கிறது. ஒவ்வொரு நாட்டின் மீதும் பொரு ளாதார தடை என்ற பெயரால் முற்று கையிட்டு பணிய வைக்கிறது. ஈரான்  மீது பொருளாதார தடைவிதித்துவிட்டு, இந்தியாவின் கைகளையும் முறுக்கு கிறது. ஏகாதிபத்திய போர் மேகம்  சூழ்ந்துள்ள நிலையில், அவற்றை  எதிர்க்க வேண்டிய போராட்டச்சூழலில் சிஐடியு அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது”என்றார்.

209 தொழிலாளர்கள் படுகொலை 
“உடலில் காயத்தோடு, தழும்போடு, வேலை இழந்து, நீதி மன்றத்திலும் களத்திலும் உயிரைக்  கொடுத்து போராடிக் கொண்டி ருக்கக் கூடிய போராளிகள் மாநாட்டில்  கூடுகின்றனர். மேற்கு வங்கத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 209 தொழிலாளர்கள் கொல்லப் பட்டுள்ளனர். திரிபுரா, கேரளா,  இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநி லங்களிலும் கொல்லப்படுகின்றனர்.

5 லட்சம் உறுப்பினர்கள் 
“தமிழகத்தில் 5 லட்சம் சிஐடியு உறுப்பினர்கள், அரசு ஊழியர் சங்கங்கள், எல்ஐசி, பிஎஸ்என்எல், வங்கி போன்ற பொதுத்துறை ஆகிய வற்றில் உள்ள 5 லட்சம் தொழி லாளர்கள் என 10 லட்சம் பேரும் வர வேற்புக்குழு உறுப்பினர்கள்தான். வரவேற்புக்குழுவில் திரைக்கலை ஞர்கள், அறிஞர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பன்முகத்தன்மை மிக்கவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த மாநாட்டையொட்டி ஏராள மான கலைப்படைப்புகளை உரு வாக்குவோம்” என்றும் சவுந்தரராசன் கூறினார்.

புதிய பண்பாடு
நாடகக்கலைஞர் பிரளயன் பேசு கையில், “அனைத்து தளங்களிலும்  பின்னடைவு நடந்து கொண்டி ருக்கும் பின்னடைவின் காலமாக  உள்ளது. ஆனால், பணிநிரந்தர முள்ள அணிதிரட்டப்பட்ட தொழி லாளர்கள்தான் போராடுவார்கள், பணிநிரந்தரமற்ற தொழிலாளர்கள் போராடமாட்டார்கள் என்ற நிலை மாறியுள்ளது. பழைய பண்பாடு சமூகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறது. இந்த மாநாட்டையொட்டி புதிய தொழிலாளி வர்க்கப் பண்  பாட்டை உருவாக்குவோம். கலை  இலக்கிய அமைப்புகள் பெரும்பங்க ளிப்பை செய்வோம்” என்றார்.

பிறந்த மண்ணில் மாநாடு
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலை வர் கே.சுவாமிநாதன் குறிப்பிடுகை யில், “இந்தியாவின் முதல் தொழிற் சங்கம் பிறந்த மண்ணில் சிஐடியு மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வு தமிழக தொழிற்சங்க இயக்க வர லாற்றில் முக்கிய நிகழ்வாக அமையும்.  அண்ணன் உடையான் பகை வெல்வான் என்பார்கள். அதுபோல  சிஐடியு அனைத்து தொழிற்சங்கங்க ளுக்கும் பலம் தந்து கொண்டு இருக்கி றது”என்றார்.

திசைவழி, நம்பிக்கை கீற்று...
“உலகம் வலதுசாரிகளிடம் சிக்கிக்  கொண்டுள்ளது. இதனை மீட்பதற்கான  திசைவழியை இந்திய தொழிலாளி வர்க்கம் காட்டும்” என்றார் மத்திய அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன்.

குறையாத போராட்ட குணம்
திரைப்பட இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், “எனது படைப்புகளில் எந்தெந்த அம்சம் இருக்கக்கூடாது. நமது சிந்தனை யாருக்கானதாக இருக்க வேண்டும் என்று கற்றுக்  கொடுத்தது கம்யூனிஸ்ட் இயக்கம். இருள் சூழ்ந்துள்ள இந்தியாவில் வெளிச்சக்கீற்றாக கம்யூனிஸ்ட் இயக்  கம்தான் உள்ளது. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலம் குறைந்தாலும், களத்திலும், போராட்ட குணத்திலும் குறையவில்லை” என்றார். “ஆணவக்கொலை, சாதிய படு கொலைகளுக்கு எதிராக இடது சாரி அமைப்புகள்தான் குரல் கொடுக்  கின்றன. அமைப்பு சார்ந்த தொழிலில் 9 மாத பேறுகால விடுப்பை போராடி பெற்றுள்ளோம். முறைசாரா தொழி லாளர்களுக்கு ஓய்வூதியம் கேட்டு போராடுகிறோம். அதிலும் வெற்றி பெறுவோம். சிறு உளிதான் மலையை பிளக்கும். நமது சிறுசிறு உழைப்பும் மாநாட்டை செதுக்கும்” என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் மோகனா குறிப்பிட்டார். ‘மூட்டா’ தலைவர் பேரா.மனோ கரன் பேசுகையில் “ஆசிரியர்களின் கவனத்தை மாநாட்டை நோக்கி திருப்புவோம்” என்றார்.

அரசு ஊழியர்களுக்காக போராடிய சிஐடியு 
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் நெ.இல. சீதரன் குறிப்பிடுகையில், “2004ல்  ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டனர். அப்  போது உலக தொழிலாளர் சம்மேள னம் (ஐஎல்ஓ) மூலம் அழுத்தம் கொடுத்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஊழியர்களுக்கு மீண்டும் பணி வாங்கி கொடுத்த இயக்கம் சிஐடியு. அதன் மாநாடு சிறக்க செயலாற்றுவோம்” என்றார்.

செய்வோம்; செய்து முடிப்போம்
திரைக்கலைஞர் ரோகிணி கூறுகை
யில், “அடுத்த தலைமுறை, சமூகம் 
எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கு முன்னு
தாரணமாக இருப்பவர்கள் தோழர் கள். தமிழகத்தில் தோழர்களுக்கு பின்ன
டைவு இல்லை. எனவேதான் நம்மை பார்த்து பலர் பயப்படுகிறார் கள். போராட்டங்களை வழி
நடத்தப்போகிற எதிர்காலத்தை திட்ட
மிடுகிற மாநாட்டின் கருத்தாக்கங் களை முன்னெடுத்துச் செல்வோம். துவண்டு விடக்கூடாது; துவள விட
மாட்டோம் என சமூக மாற்றத்திற்கான வழிகாட்டுதல்கள் தோழர்கள் மூலமே நிகழும். சமூக மாற்றத்தில் ஒரு சில அடிகளையாவது முன்னெடுத்து வைப்போம். செய்வோம்; செய்து முடிப்போம்”என்றார்.


சிஐடியு இருக்கும் வரை பயம் ஏது?
“ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுப்பதற்காக பிஎஸ்என்எல்-ஐ அரசு சீரழிக்கிறது. சிஐடியு இருக்கும் வரை பிஎஸ்என்எல் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம். பிஎஸ்என்எல் குறித்து மாநிலங்களவையில் சிபிஎம் எம்பி கரீம்தான் குரல் எழுப்பினார். போராடுகிறவர்களுக்கு நம்பிக்கையூட்டுகிற சிஐடியு மாநாட்டிற்கு அனைத்துவகையிலும் உழைப் போம்” என்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர் கன்னியப்பன் கூறினார்.

வர்க்கத் திரட்சி
இயக்குநர் லெனின்பாரதி பேசுகையில், “எத்தனையோ தியாகம், ரத்தத்தின் மீது கட்டப்பட்டது தொழிற்சங்கம். முதலாளித்துவம் முரண்பாடுகளின் மூட்டை. நமது முரண்பாடுகள் நட்புரீதியானவை. பாட்டாளி வர்க்க அரசியல் ஆரோக்கியமாக இருக்க நட்பு முரண்களை களைந்து செயலாற்றுவோம். பொதுத்துறைகளே இல்லாமல் போகும் ஆபத்து சூழ்ந்துள்ளது. தொழிற்சங்கத்திற்கும் பொதுச் சமூகத்திற்கும் இடையேயான இடைவெளியை குறைப்போம். பாட்டாளி வர்க்க திரட்சியை உருவாக்குவோம் என்றார்.

திருப்புமுனை
இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தமது உரையில், “பொதுத்துறைகளை பாதுகாக்க தொழிற்சங்கங்கள்தான் போராடிக் கொண்டிருக்கின்றன. போராட்டங் களை கூர்மைப்படுத்துவோம். சிஐடியு மாநாடு இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் திருப்பு முனையாக அமையும். உத்வேகமாகவும், உதவியாகவும் செயலாற்றுவோம்” என்றார்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...
“மத்திய மாநில அரசுகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களை சமாளிக்கக்கூடிய அளவில் வலுப்  பெறுவோம். மாநாட்டுப் பணிகளில் இளந்தலைமுறையை அதிகளவு ஈடுபடுத்துவோம். ‘உண்டி கொடுத் தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது  புறநானூறு. எனவே, மாநாட்டிற்கான உணவு முழுவதையும் வழங்குகி றோம்” என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் பெ.சண்முகம் அறிவித்தபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.

வளர்ச்சிக்கான காலம்
வரவேற்புக்குழு பட்டியலை முன்மொழிந்து பேசிய சிஐடியு மாநில  பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், தொழிற்சங்க இயக்கம் வளர்வ தற்கான வாய்ப்பு அதிகம் உள்ள காலத்தில் உள்ளோம். போராட்டம் எப்போது வேண்டுமானலும் வெடிக்க லாம் என்ற சூழல் உள்ளது. சென்னை யில் சில தினங்களுக்கு முன்பு நடை பெற்ற போக்குவரத்து தொழிலாளர் களின் போராட்டம் அதற்கு உதார ணம். இதுபோன்ற திடீர் போராட்டங்க ளுக்கேற்ப திறன்களை வளர்த்துக் கொள்வோம். இடதுசாரி இயக்கத் திற்கு புதுபொலிவையும், தெம்பை யும் உருவாக்கக்கூடிய மாநாடாக அகில இந்திய மாநாடு இருக்கும் என்றார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்புத் தலைவர் ஆர்.ெஜகதீசன், போக்குவரத்து ஓய்வூதியர் சங்கத் தலைவர் கர்சன் உள்ளிட்டோர் பேசி னர். துணைப்பொதுச் செயலாளர் வி.குமார் நன்றி கூறினார். முன்னதாக  மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு வரவேற்றார். இந்த கூட்டத்தில் ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம் (தென்சென்னை) சார்பில் இரண்டாம் கட்டமாக ஒரு லட்சம் ரூபாயும், டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் சார்பில் 50 ஆயிரம் ரூபாயும் மாநாட்டு நிதியாக மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது.