சென்னை, செப். 17 - பெண்கள் மீதான கொடுமை களுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றி ணைய வேண்டும் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
தந்தை பெரியாரின் 146-ஆவது பிறந்த நாளான செவ்வாயன்று (செப்.17) சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உரு வச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.
ஒன்றிய பாஜக ஆட்சியை வீழ்த்த உறுதியேற்கிறோம்!
அதைத்தொடர்ந்து, செய்தியா ளர்கள் மத்தியில் கே. பாலகிரு ஷ்ணன் பேசினார். அப்போது, “ஆணாதிக்க சிந்தனை போக்கு, பெண்ணடிமைத்தனம், சாதிய ஏற்றத் தாழ்வுகள், சமூக கொடுமை களுக்கு எதிரான தந்தை பெரியா ரின் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று உறுதி யேற்கிறோம். இந்தியாவில் ஆட்சி யில் உள்ள சனாதன, மதவெறி பிடித்த பாஜக, வர்ணாசிரமத்தை யும், பெண்ணடிமைத் தனத்தையும் உயர்த்திப் பிடிக்கிறது. இந்த ஆட்சியை, மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரண்டு வீழ்த்துவதற்கான போராட்டத்தையும் தொடர்வோம் என உறுதியேற்கிறோம்” என்றார்.
மேலும், “சமூகத்தின் சரிபாதி யாக உள்ள பெண்களுக்கு அனு தினமும் கொடுமைகள் இழைக்கப் பட்டு வருகின்றன. வினாடிக்கு வினாடி கொடுமைகள் அதிகரிக்கி ன்றன. பாலியல் வன்கொடுமை; கொடூர தாக்குதல்; பச்சிளம் குழந் தைகள் முதல் வயதான முதிய பெண்களுக்கு கூட இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலை உள் ளது. எனவே, பெண்களுக்கு இழைக் கப்படும் கொடுமைகளுக்கு எதி ரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தார்.
கோயில்களை கொள்ளையடிக்க சங்-பரிவார் கூட்டம் திட்டம்!
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், “அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும்’ என்று நிர்மலா சீதா ராமன் மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ், பாஜகவும் நீண்ட காலமாக வலி யுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் உள்ள கோவில்கள், கோவில் சொத்துக்கள் பாதுகாப்பாக உள் ளன. தனியார் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை பறிமுதல் செய்து அரசு பாதுகாத்து வருகிறது. அறநிலையத்துறையிடம் உள்ள கோவில்களை விடுவித்து யாரிடம் கொடுக்கப் போகிறார்கள்? கோவில்கள் சொத்துக்களை கொள்ளை அடிக்க குறிவைத்து பிரச்சாரம் செய்கின்றனர். இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.
சித்ரவதைக்கு உள்ளாகும் மீனவர்கள் செப்.20-சிபிஎம் ஆர்ப்பாட்டம்
மற்றொரு கேள்விக்கு பதி லளிக்கையில், “4 அல்லது 5 நாட் களுக்கு ஒருமுறை இலங்கை அர சால் மீனவர்கள் கைது செய்யப்படு கின்றனர்; படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன; மீனவர்களை சிறையில் வைத்து சித்ரவதை செய்கின்றனர். தற்போது, மொட்டை அடித்து இழிவுபடுத்தும் அட்டூழியத்தைச் செய்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதுகிறார். ஆனால், மோடி அரசு ஒரு துரும்பைக் கூட அசைக் காமல் உள்ளது. மீனவர்களை மட்டுமல்ல தமிழக மக்களையும் உதாசீனப்படுத்துகிறது. மீன வர்கள் விவகாரத்தில் ஒன்றிய அர சின் பாராமுகத்தைக் கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது” என்றார்.