தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும், பொதுவேலை நிறுத்தத்தை ஆதரித்தும் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் இடதுசாரி கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநிலச் செயலாளர் அ.மு.சலீம் தலைமை தாங்கினார். இதில் சி.பி.எம் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், பிரதேசக்கு உறுப்பினர் தா.முருகன், சிபிஐ மாநில நிர்வாகிகள் நாரா.கலைநாதன், ராமமூர்த்தி, சிபிஐ- எம்எல் மாநிலத் தலைவர்கள் பாலசுப்பிரமணியன், பழனி,மோதிலால் உட்படபலர்கலந்து கொண்டனர்.
ஜே.என். யூ பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர், வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுந்தர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், ராமதாஸ், அன்பரசன், எம். ரவி, செல்வி, குமரன், ஆர். ரவி உட்படபலர் பங்கேற்றனர்.