சென்னை, மே 9- திருச்சி துறையூரைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கு அங்குள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.சீனிவாசனுக்கு ஆதரவாக வழக்கறிஞர் பாண்டி என்பவர் வழக்கை வாதாடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கான கட்டணத்தைக் கொடுக்காமல் சீனிவாசன் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணத்தைக் கேட்ட போது தன்னை சீனிவாசன் ஆபாசமாக பேசியதாக மணப்பாறை போலீசில் ஆதாரத்துடன் வழக்கறிஞர் பாண்டி, புகார் கொடுத்துள்ளார்.