தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலங்களில் வசிக்கின்றன. இவர்கள்தான் தாம்பரம் மாநகரை செதுக்கிய உழைப்பாளர்கள். பூகோள ரீதியாக தாம்பரத்தில் வாழ்விடத்திற்கான பரப்பளவு குறைவு. உதாரணமாக, சென்னை கிறித்துவக் கல்லூரி, அதனருகே விமானப் படைத்தளம் பலநூறு ஏக்கரில் அமைந்துள்ளன. மெப்ஸ், நெஞ்சக நோய் மருத்துவமனை, தேசிய சித்தா மருத்துவமனை, சிட்லபாக்கம் குடோன் என அடுத்தடுத்து பல நூறு ஏக்கரில் உள்ளன. ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியாக இருந்த இடம் தற்போது தகவல் தொழில்நுட்ப பூங்காவாகவும் அடுக்கு மாடி சொகுசு வீடாக வும் மாறியுள்ளது, மேற்கே காப்புக்காடும், மலைகளும், நகரின் மையத்தில் ரயில் நிலையம், ரயில்வே மைதானம், ரயில் பழுது பார்க்கும் நிலையம் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான நூறு ஏக்கரில் விரிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் மக்கள் வாழ்விடத்தை எங்கே அமைத்துக் கொள்வார்கள்? எனவே, மக்கள் தங்கள் வாழ்நாளில் சேமித்ததை முதலீடாக்கி புறம்போக்கு நிலங்களில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு சாலை, மின் இணைப்பு, மழைநீர் வடிகால்வாய் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அரசு வரி வசூலித்து வருகிறது. மக்களின் வாழ்விடத்தின்நில மதிப்பு உயர்ந்து விட்டது. இதனால், ஏழைகளை ஆக்கிர மிப்பாளர்கள் என்று வெளியேற்றுவதில் எந்தவித நியாயமும் இல்லை. அரசு நிலங்களில், பயன்பாட்டை இழந்த நீர்நிலை பகுதி யில் வசிக்கும் மக்களுக்கு, அந்த நிலங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலங்க ளில் வசிப்போருக்கு நியாயமான தொகையை பெற்றுக் கொண்டு பட்டா தர வேண்டும். குத்தகை பணத்தை செலுத்த முடியாதவர்களுக்கு தவணை முறையில் செலுத்த ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 2 அன்று சண்முகம் சாலையில் தாம்பரம் மாநகராட்சி பட்டா கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருண்ணன் சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டிற்கு அனைத்து பகுதி மக்களும் அணி திரண்டு வர வேண்டும். நம் ஒற்றுமையே நமது பலம். நிலம் நமது உரிமை. அதை கொடுப்பது அரசின் கடமை. - தா.கிருஷ்ணா தாம்பரம் தொகுதி செயலாளர், சிபிஐ(எம்)