அரசு அதிகாரிகள் துணையுடன் பட்டா நிலம் ஆக்கிரமிப்பு!
கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் பட்டா நிலத்தை அரசு அதிகாரி கள் துணையுடன் ஆக்கிர மித்துள்ளதை கண்டித்தும், உடனடியாக பட்டா நிலத்தை மீட்டு, அளவீடு செய்து, விவசாயிகள் சங்கத்திடம் ஒப்படைக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கு உத்தனப்பள்ளியில் தனது 1.25 சென்ட் பட்டா நிலத்தை தானமாக எழுதிக் கொடுத்தார். அந்த நிலத்தை ஒட்டிய பகுதியில் நிலத்தரகர்கள் வீட்டு மனை கள் அமைப்பதற்காக இடத்தை வாங்கியுள்ளனர். மேலும் அருகில் உள்ள வாரி புறம்போக்கை ஆக்கிரமித்தும், அதிகமான விலைக்கு விற்பனை செய்தும் வருகின்றனர். விவசாயிகள் சங்க பட்டா நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமித்ததுடன் அதன் மீது பாறை கற்களை கொட்டி, சுற்றிலும் வேலி அமைத்துள்ளனர். சங்கத்தின் பட்டா நில ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி கேட்ட மாவட்டத் தலைவர் முருகேசனையும் மற்றும் சில நிர்வாகிகளை யும் கொலை செய்துவிடு வோம் என மிரட்டியுள்ள னர். உடனடி யாக உத்தனப் பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது காவல்துறையினர் வந்து ஆய்வு செய்து பட்டா நிலம் என்று தெரிந்தும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. மீண்டும் 11.4.2025 அன்று மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாள ருக்கும், சூளகிரி வட்டாட்சி யருக்கும் சங்க பட்டா நில ஆக்கிரமிப்பு குறித்தும்,சில அடியாட்கள் விவசாயிகள் சங்கத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவது குறித்தும்,சங்கத்தின் பட்டா நிலத்தை மீட்டுத்தரக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகும் எந்த நட வடிக்கையும் எடுக்காததால் 15.4.2025 இல் விவசாயிகள் சங்க பட்டா நிலத்தை மீட்டிடவும், இது குறித்து நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட தரகர்கள், அடியாட்களை கண்டித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உத்தனப்பள்ளி பேருந்து நிறுத்தத்திலும், அதன் பிறகு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சங்க பட்டா நிலத்திலும் விவசாயிகள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ் தலைமையில் சூளகிரி வட்டச் செயலா ளர் டி.முரளி முன்னிலை யில் மாநிலச் செயலாளர் பி.பெருமாள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ் ஆகியோர் பேசி னர். தகவல் அறிந்து மாவட்ட துணைக் கண்காணிப்பாளர், உத்தனப்பள்ளி காவல் ஆய்வாளர் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பட்டா நிலத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள பாறாங்கற்களையும், வேலியையும், ஆக்கிர மிப்பையும் அகற்றி தடை களைத் தாண்டி கட்டிடம் கட்டுவதற்கும் தயாராகி னர். தொடர்ந்து அரசு அதி காரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சி.பி.ஜெயராமன், நடராஜன், இளம் தலைவர் புருஷோத்தமரெட்டி, மாவட்டத் தலைவர் முருகேசன் பொருளாளர் எம்.எம்.ராஜு,மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமாரவடியில், துணைத் தலைவர் குண்டப்பா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், மாதர் சங்க மாவட்டச் தலைவர் சரஸ்வதி கலந்து கொண்ட னர். அப்போது 21.4.2025 அன்று நிலம் அள வீடு செய்து, ஆக்கிரமிப்பா ளர்களை அகற்றி, நிலத்தை தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்திடம் ஒப்படைப்ப தாக உறுதிய ளித்தனர். அதைத்தொடர்ந்து தற்காலிகமாக விவசாயிகள் சங்க போராட் டம் கைவிடப் பட்டது.