சென்னை,அக். 22- தீபாவளியை முன்னிட்டு இல்லங்களில் விளக்குகளை கொண்டு அலங்கரிப்பது வழக்கம். வீடுகளுக்கு உற்றார் உறவினர் வந்து மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடும் போது வீடுகளை அலங்கார பொருட்களை கொண்டு அலங்கரிப்பது இந்திய வழக்கம். இதற்காக இந்தாண்டு விதவிதமான விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன. அழகான கலைஞர்க ளின் தயாரிப்பில் உருவாக்க ப்பட்டுள்ள விதவிதமான விளக்குகள் ஒவ்வொருவரின் இல்லங்களையும் மேலும் பொலிவூட்டும் என்று பர்ப்பிள் டார்டல்ஸ் நிறுவனம் தெரி வித்துள்ளது. பெங்களூரு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தீபாவளி பஜாரில் இந்த விளக்குகள் கிடைக்கின்றன.கைகளால் செய்யப்பட்ட மற்றும் செராமிக்கால் வடிவமைக்க ப்பட்ட இந்த விளக்குகளில் மெழுவர்த்திகளை பொருத்தினால் இரவில் அழகாக காட்சியளிக்கும்.