வடசென்னை மண்டல அளவில், 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் சிஐடியு நடத்தி வரும் நிர்மல் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவி அணிகள் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றன. இதையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் டயானா ஜூலியட், உடற்கல்வி ஆசிரியர் ராஜகுரு, கைப்பந்து அணிகளுக்கு சிஐடியு மாநிலத் தலைவரும், பள்ளிச் செயலாளருமான அ.சவுந்தரராசன் பாராட்டு தெரிவித்தார்.