tamilnadu

கிருஷ்ணகிரி மற்றும் குடியாத்தம் முக்கிய செய்திகள்

கிருஷ்ணகிரியில்  40 கொத்தடிமைகள் மீட்பு

கிருஷ்ணகிரி, மே 29- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பசுமைக்குடில்களில் கொத்தடிமைகளாக இருந்த 40க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் மீட்கப்பட்டனர். கிருஷ்ணகிரி தேன்கனிகோட்டை அருகேயுள்ள முத்துராயன்கொட்டாய் கிராமத்தில் பசுமைக்குடில்களில் கொத்தடிமைகளாக இருந்த 40க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் உணவு இன்றி தவித்தனர். இதனையடுத்து அவர்கள் வெள்ளியன்று (மே 29) காலை அங்கிருந்து வெளியேறி மூட்டை முடிச்சுகளுடன் நடந்து தேன்கனிகோட்டைக்கு வந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் அவர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் உத்திதரப்பிரதேச மாநிலம் மெகராவதி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. பொதுமுடக்கத்தின் காரணமாக  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் அவர்களது விருப்பப்படி சொந்த மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் முத்துராயன்கொட்டாயிலுள்ள 40 வடமாநில தொழிலாளர் குடும்பங்களும் தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என பசுமைகுடில் மேற்பார்வையாளரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர்களோ இவர்களை சொந்த ஊருக்கு அனுப்பாமல் அங்கேயே கொத்தடிமைகளாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பசுமைகுடில் உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் விரைவில் பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கைகளை கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

60 ஆண்டு காலமாக வசிக்கும்  தலித்துகளுக்கு குடிமனை பட்டா: சிபிஎம் கோரிக்கை

குடியாத்தம், மே 29- வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டம் கார்கூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சகாயபுரம் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தலித் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தாலுகா செயலாளர் குணசேகரன் வட்  டாட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பேர்ணாம்பட்டு வட்டம்  கார்கூர் ஊராட்சி சகாயபுரம்  பகுதியில் 60 ஆண்டுகளுக் கும் மேலாக வசிக்கும் மக்க ளுக்கு பட்டா கேட்டு பல முறை ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை உள்ளிட்டவை  இருந்த போதிலும் அந்த மக்களை அங்கிருந்து அப்  புறப்படுத்த வருவாய்த்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்  நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்  கங்கள் நடத்திய போராட் டத்தை தொடர்ந்து தனது முடிவை தள்ளிவைத்தது. ஆனாலும் அந்த மக்கள் நிரந்தரமாக வசிப்பதற்கும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதற்கிடையே, இம் மாதம் 27ஆம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர் அந்த பகுதிக்கு சென்று தலித் மக்களை உடனடியாக வெளியேறுமாறும் இல்லை யென்றால் வீடுகளை இடித்து தள்ளுவோம் என மிரட்டியுள்ளார். கொரோனா வைரஸ்  தாக்கத்தினால் நாடு அச்சத் தில் உறைந்து கிடக்கும் இந்த சூழ்நிலையிலும், ஒதுங்குவதற்கு கூட இட மில்லாத தலித் மக்களை  குடிசைகளை விட்டு வெளி யேறுமாறு மிரட்டும் அதிகாரி யின் மனிதாபிமானமற்ற செயல் கண்டிக்கத்தக்க தாகும். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் குடிசை அமைத்து வசித்து வரும் தலித் மக்களுக்கு பட்டா வழங்கி பாதுகாக்க வேண்டும். அந்த மக்க ளுக்கு தேவையான குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தர வேண்டும்  என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு குணசேகரன் தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வை புதுவை அரசு திரும்பபெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி, மே 29- ஏழை எளிய மக்களை பாதிக்கும் பெட் ரோல் டீசல் மீதான வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புதுவை அரசை வலியுறுத்தி யுள்ளது. கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட நான்கு முறை ஊரடங்கு அறி விக்கப்பட்டு வரும் மே 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நோய் தடுப்புக்கான சுகாதார கட்ட மைப்புகளை வலுப்படுத்துவது, புலம்பெயர்  தொழிலாளர்களின் பாதுகாப்பு, வாழ்வா தாரத்தை இழந்த மக்களுக்கு உணவு மற்றும்  நேரடி பணப் பயன்கள் வழங்குதல், பொருளா தார புத்துயிர் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டிய தருணம் இது. மத்திய அரசு அதற்கேற்ப தொலை நோக்குப் பார்வையோடு செயல்படவில்லை.

மாறாக அசாதாரணமான சூழலில் தனி யார்மய நடவடிக்கைகள், கல்வி உரிமை மீதான தாக்குதல்களை தொடுத்து வருகிறது. மேலும் தொடர்ச்சியாக மக்கள் மீதான வரிச் சுமையை உயர்த்திக்கொண்டே வருகிறது. மேலும் கட்டண விகித உயர்வுகள் போன்ற மோசமான நடவடிக்கைகளையும் மோடி தலைமையிலான பாஜக அரசு  மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசும், தனது  பங்கிற்கு மின் கட்டண உயர்வு, பெட்ரோல் -  டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளது. ஏப்ரல்  10 ஆம் தேதி பெட்ரோல்- டீசலுக்கு 1 விழுக்  காடு வரி உயர்வை அரசு அமல்படுத்தியது. தற்போது மே 29ஆம் தேதி முதல் கூடுதல் வரியாக பெட்ரோலுக்கு 6 விழுக்காடும், டீச லுக்கு 3.65 விழுக்காடும்  வரி உயர்வு அறி விக்கப்பட்டுள்ளது. பொருளாதாரமும், மக்கள் வாழ்வாதார மும் முடங்கியுள்ள இந்தச் சூழலில் வரி  உயர்வு என்பது மக்களை மேலும் வாட்டி  வதைக்கும் செயலாகும். எனவே அரசு அறி வித்துள்ள வரி உயர்வு, கட்டணஉயர்வுகளை உடனே திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெறுவது மாற்று  வழியில் நிதி திரட்டுவது, போன்ற நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி கேட்டு கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.