கொரோனா மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பணி துவங்கி உள்ளது.
கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற மருந்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தின் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா உட்பட நாடு முழுவதும் சுமார் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று தமிழகத்தில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை துவங்கி உள்ளது. தன்னார்வலர்கள் 10 பேரில் இருவருக்கு 0.5 என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.