tamilnadu

img

கொடுங்கையூர் குப்பைமேடு பிரச்சனைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணப்படும்

சென்னை, ஏப். 6- கொடுங்கையூர் குப்பைமேடு பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு  காணப்படும் என வடசென்னை மக்கள வைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேட்பாளர் கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 39, 43ஆவது ஆகிய வார்டுகளில் சனிக்கிழமை (ஏப்.6)  கூட்டணி கட்சி யினர் புடை சூழ வீடு வீடாகச் சென்று  அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆர்.கே. நகரில் உள்ள ஜீவா பூங்கா  ரூ.92 லட்சம்  மதிப்பீட்டிலும், தந்தை பெரியார்  பூங்கா ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும்  புதுப்பிக்கப்பட்டது. தண்டையார் பேட்டை திருவள்ளுவர் நகரில் ரூ.9 லட்சம்  மதிப்பீட்டில் திறந்தவெளி  உடற்பயிற்சிக் கூடம் கட்டப்பட்டுள்ளது.  புதிய வினோபா நகரில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டிலும், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும், இளைய தெருவில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலும் பல்நோக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சேனியம்மன் கோவில் தெருவில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் உள்ளரங்கம் கட்டப்பட்டுள்ளது. கார்னேசன் நகர் சென்னை மாநகராட்சி பள்ளிக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய  மேசை, இருக்கை, நாற்காலி வழங்கப் பட்டுள்ளது. இப்படி தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தொழிற் சாலைகளின் சமூக பாதுகாப்பு நிதி என  மொத்தம் 7 கோடியே 49 லட்சம் ரூபாய்க்கு பணிகள் செய்து கொடுத் துள்ளேன்.

என்னை நீங்கள் மீண்டும் தேர்தெடுத்தால், மென்மேலும் இது போன்ற மக்கள்நல பணிகளை தொடருவேன். அரசு நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன். நீண்டகால பிரச்னையான கொடுங்கை யூர் குப்பைமேட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகளை  முதலமைச்சர் தொடங்கி வைத்துள் ளார்.  குப்பைமேடு பிரச்சனை விரை வில் சரி செய்யப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

இதில் சென்னை வடக்கு மாவட்ட  செயலாளர் ஆர்.டி.சேகர், சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர், பகுதிச்  செயலாளர் லட்சுமணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், சிபிஎம்  மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோக நாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக் குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா,  விசிக மாவட்டச் செயலாளர் சவுந்தர்,  சிபிஐ மாவட்டச் செயலாளர் வெங்க டேஷ், த.கு.வெங்கடேஷ் வேம்புலி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.