tamilnadu

சுற்றுலா தலமாக மாறும் கொடியம்பாளையம் தீவு

 சென்னை, ஜூலை 12- சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது, சீர்காழி தொகுதி கொடிம்பாளையம் கடற்கரை தீவு கிராமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என அதிமுக உறுப்பினர் பாரதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லம் மண்டி நட ராஜன்,“ இதற்கு பதில் அளித்த அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன், கொடியம்பாளை யம் கடற்கரை தீவு, நாகப்பட்டினத் தி லிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா பகுதியில் கடல் நீர் சூழ்ந்து தீவு போல காட்சி அளிக்கிறது. அங்கு படகு குழாம் ஏற்படுத்தி சுற்றுலாத்  தலமாக மாற்ற பொதுப்பணி துறை, வனத்துறை உள்ளிட்ட பல துறைகளுடன் ஆலோசித்து, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.