சென்னை, மே 28 - கேசவன் பிள்ளை பூங்கா குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை, நீதிமன்ற வழிகாட்டுதல்படி பயனாளி களுக்கு வழங்கக்கோரி வியாழனன்று (மே 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் தொகுதி, கேச வன் பிள்ளை பூங்காவில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கள் இடிக்கப்பட்டு, புதி தாக 864 வீடுகள் கட்டப்பட் டுள்ளன. ஏற்கெனவே இருந் தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையும் கொடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும், வீடுகளை ஒதுக்காமல் உள்ளனர். மாறாக, அங்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை தங்க வைப்பதற்கான தனிமைப்ப டுத்தும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி கள், ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தர விட்டனர்.
இந்நிலையில் மக்களின் அச்சத்தை போக்கி ஒதுக் கீடுதாரர்களிடம் வீடுகளை ஒப்படைக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடை பெற்றது. இதன் பின்னர் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, எழும்பூர் பகுதிச் செயலாளர் வழக்கறிஞர் முருகன், ஆறுமுகம், அன்பு ஆகியோர் உயரதி காரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரி கள், கொரானா தொற்று பரிசோதனை செய்யப்பட்ட வர்களை தனிமைப்படுத்தி வைக்க அந்த அடுக்குமாடி கட்டிடம் பயன்படுத்த உள்ளதாகவும், இது தற்காலி கமானதுதான். குறுகிய காலத்திற்குள் ஒதுக்கீடு தாரர்களுக்கு குடியிருப்பு முறையாக வழங்கப்படும் என உறுதியளித்தனர்.