திருவனந்தபுரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநி லக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. சென்ட ரில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதல்வருமான பின ராயி விஜயன், கட்சியின் கேரள மாநிலச் செய லாளர் எம்.வி. கோவிந்தன் மாஸ்டர் ஆகி யோரை, கட்சியின் மத்தியக்குழு உறுப்பின ரும், அகில இந்திய 24-ஆவது மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவருமான கே. பாலகிருஷ்ணன், வெள்ளிக்கிழமையன்று காலை நேரில் சந்தித்தார். அவரிடம் ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறும் கட்சியின் அகில இந்திய மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து, பினராயி விஜயன் கேட்டறிந்தார். மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவான முறையில் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும், மாநாட்டை யொட்டி தீக்கதிர் நாளிதழ் சார்பில் சிறப்பிதழ் வெளியிடப்பட உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் நடத்திய போராட்டங்கள், குறிப்பாக கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு படைத்த சாதனைகளும், அது மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கட்டுரைகள் இடம்பெற உள்ளது பற்றி யும் எடுத்துரைத்தார். அவற்றைக் கேட்டு பினராயி விஜயன் தமது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி, தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், தீக்கதிர் திருவனந்தபுரம் செய்தியாளர் ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.