tamilnadu

பாஜகவின் செயல்பாடுகள் பன்முகத்தன்மையை பாதிக்கும் நோன்பு திறப்பு நிகழ்வில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை, மே 27-பாஜகவின் செயல்பாடுகள் இந்தியாவின் பன்முகத்தன் மையை பாதிக்கும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஞாயிறன்று (மே 26) சென்னையில் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கே.பாலகிருஷ்ணன், இந்தியாவில் ஒரு மதத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து அரசியல் செய்ய தொடங்கிய பிறகு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அச்சத்தை அதிகரிப்பதோடு, இந்தியாவின் பன்முகத் தன்மை சிதையும் நிலையை உருவாக்கி உள்ளது. இந்தியர்களாக ஒன்றிணைந்து பன்முகத் தன் மையை பாதுகாப்போம் என்றார்.செய்தியாளர்களின் கேள் விக்கு பதிலளித்த பாலகிருஷ் ணன், “பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ளபடி 370வது பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாட் டிற்கு பெரும் ஆபத்து நிகழும். இத்தகைய ஆபத்துக்களில் இருந்து நாட்டை பாதுகாக்க மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டும். எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு மட்டும் ஒன்று கூடாமல் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளிலும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு தேசம் முழுவதும் ஒன்றுபட்டிருந்தால் மோடிக்கு இந்தளவிற்கு வெற்றி கிடைத்திருக்காது”என்றார்.மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து தொடர் போராட்டம் நிகழ்த்தியதால் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்துள் ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக தமிழகம் திகழ்கிறது. தமிழக பாஜக தலைவர்கள் மக்கள் தீர்ப்பை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் தவறாக பிரச்சாரம் செய்ததாக பேசுகிறார்கள். மோடி, எடப்பாடி அரசுகளின் உண்மையான விவரங்களை மக்களிடம் கூறினோம். அணு அளவு கூட உண்மைக்கு மாறான விஷயங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்யவில்லை.” என்றார்.“தமிழகம் முழுவதும் மதச்சார் பற்ற கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றிருப்பது ஆய்வுக்குரியது. ஏற்கெனவே அங்கு  சரளமாக பண விநியோகம் நடைபெற்றது. தேர்தல் விதிகள் மீறப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் கூட முரண்பாடுகள் உள்ளன” என்றார் பாலகிருஷ்ணன்.