tamilnadu

img

காஞ்சிபுரம் டிஎஸ்பி-யை கைது செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

பூச்சிவாக்கம் பகுதியில் பேக்கரி ஒன்றில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பான புகார் மீது ஒருமாத காலமாக நடவடிக்கை எடுக்காத டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தின்படி கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தொடந்து அவர் நேற்று கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டி.எஸ்.பி.யை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன், நிர்வாக ஒப்புதல் பெற வேண்டும்; இந்த நடைமுறையை பின்பற்றாததால், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.