காஞ்சிபுரத்தில் தற்காலிக காய்கறிச்சந்தை இடமாற்றம்
காஞ்சிபுரம், ஜூலை 17- காஞ்சிபுரத்தை அடுத்த வையாகூரில் செயல்பட்டு வந்த தற்காலிக சந்தை நசரத்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அந்த இடத்தை வெள்ளியன்று (ஜூலை 17) சார் ஆட்சியர் எஸ்.சரவணன் ஆய்வு செய்தார். காஞ்சிபுரத்தில் மிகவும் பழமையான காய்கறி சந்தை, பழைய ரயில் நிலைய சாலை யில் ராஜாஜி மார்க்கெட் என்ற பெயரில் இயங்கி வந்தது. கொரோன அச்சுறுத்தை தொடர்ந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, வையாகூர் சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களாக வையாகூர் சாலையில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, தொடர் மழை காரணமாக சேறும், சகதியுமானது. இதனால் வியாபாரிகளும், காய்கறிகளை வாங்க வருகிற பொதுமக்களும் மிகுந்த அவதிப்பட்டனர். எனவே, தற்காலிக காய்கறி சந்தையை காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் நசரத்பேட்டை பச்சை யப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதா னத்துக்கு மாற்றம் செய்வது என அதிகாரி கள் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளர் ரா. மகேசுவரி தலைமையில் நகராட்சி உதவிப் பொறியாளர்கள் பிரதாபசந்திரன், பிரகாஷ் ஆகியோர் மேற்பார்வையில் சந்தை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதனை காஞ்சிபுரம் சார் ஆட்சியர் எஸ்.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை இல்லாமல் இருந்தால் திங்கட்கிழமை (ஜூலை 20) முதல் காய்கறி சந்தை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளை யாட்டு மைதானத்தில் செயல்பட தொடங்கும் என்று அதிகாரிகள் தெவித்தனர்.
அடிப்படை வசதி கேட்டு போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
திருக்கோவிலூர், ஜூலை 17- எடையூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டதால் வியாழக்கிழமை (ஜூலை 16) நடைபெற இருந்த போராட்டத்தை இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஒத்தி வைத்தனர். திருக்கோவிலூர் வட்டம், எடையூர் கிராமத்தில் தொடர்ந்து குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இக்கிரா மத்தில் மாரியம்மன் கோயில் அருகிலும், நூலகம் எதிரிலும் உள்ள மினிடேங்குகளை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், பழனி நகரில் புதிய மினி டேங்க் அமைக்க வேண்டும், கடந்த ஒரு வருடமாக பழுதடைந்து கிடக்கும் பொதுக் கழிப்பறையை சீர்மைக்க வேண்டும், பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள உயர்மின் விளக்குகளை புதுப்பிக்க வேண்டும். தலித் மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை அளந்து வேலி அமைக்க வேண்டும், தேவியந்தல் ஏரியில் புதிய மதகு அமைக்க வேண்டும், அனைத்து ஏரிகளையும் மராமத்து செய்ய வேண்டும், 100 நாள் வேலை பயனாளிகளுக்கு சட்டக் கூலி 256 ரூபாயை கணக்கிட்டு கூலி பாக்கியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வாலிபர் சங்கம் அறிவித்தி ருந்தது. இந்நிலையில் திருக்கோவிலூர் ஒன்றிய ஆணையர் மற்றும் அதிகாரிகள்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் மேற்கண்ட கோரிக்கைகளை ஒரு மாதத்தில் நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமான உடன்படிக்கை ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எம்.கே.பழனி, செயலாளர் வே.ஏழுமலை, துணைச் செய லாளர் மு.சிவகுமார், வட்டச் செயலாளர் கே.ஹரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
சிலம்பப் பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும் பயிற்சியாளர் ஆர்.முருகக்கனி வேண்டுகோள்
திருவள்ளூர், ஜூலை 17- சிலம்பாட்டத்திற்கு திறந்தவெளியில் பயிற்சி அளிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பயிற்சியாளர் ஆர். முருகக்கனி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம். 1980-ல் தமி ழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்க்கப்பட்டது. 1995ல் நடந்த தெற்காசிய போட்டியில் காட்சிமுறை விளை யாட்டாக ஆடி காட்டி பாராட்டு பெற்று, 2007ல் பள்ளி விளை யாட்டாக சேர்க்கப்பட்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலும் ஊரடங்கு அமலாகியுள்ளது. இதனால் சிலம்ப பயிற்சி தரமுடிய வில்லை. உடல் ஆரோக்கியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்கும் ஆற்றல் கொண்ட சிலம்பம். தமிழக பாரம்பரிய மருத்துவ ஆற்றல் கொண்டது சிலம்பாட்டம். 5அடி கம்புடன் 6 அடி இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து காலை அல்லது மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்க வேண்டும் என்று தேசிய சிலம்ப பயிற்சியாளர் ஆர். முருகக்கனி கோரிக்கை வைத்துள்ளார்.
பழங்குடியினர் பகுதியில் தீண்டாமை வேலி மார்க்சிஸ்ட் கட்சி முயற்சியால் அகற்றம்
விழுப்புரம், ஜூலை 17- விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் அச்சரம்பட்டு ஊராட்சியில் ஆதியன் பழங் குடி இன மக்கள் (பூம் பூம் மாட்டுக்காரர் கள்) கடந்த 15 ஆண்டுகளாக சாலையோர புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வந்த னர். அரசிடம் இலவச வீட்டு மனை பட்டா கோரி வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால், அந்த மக்க ளுக்கு 2.6.18 அன்று வட்டாட்சியர் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார். இதனையடுத்து அந்த இடத்தில் வீடு கட்டி, மின் இணைப்பு பெற்று மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பழங்குடி மக்கள் வெளியே வரமுடியாதபடி, சாதி ஆதிக்க சக்திகள் பொது வழியை மறித்து தீண்டாமை சுவர் போல் கம்பி வேலி அமைத்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சித் தலை வர்கள், தீண்டாமை கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சி யாக போராட்டம் நடத்த உள்ளதாக எச்ச ரித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதன்கிழமையன்று (ஜூலை 15) நேரில் சென்று அந்த வேலியை அகற்றினர்.