சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்து பெரம்பூர் நிலையம் வந்தடைந்த கல்வராயன்!
சென்னை,மே 14- மாதவரம் - சிறுசேரி மெட்ரோ ரயில் திட்டத்தில் அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணியில் ஈடு படுத்தப்படிந்த கல்வராயன் இயந்தி ரம் தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து பெரம்பூர் ரயில்நிலையம் வந்தடைந்தது. சென்னை மெட்ரோ ரயில் வழித் தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி வரை சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட பாலத்தில் ரயில் பாதைகள் அமைக்கும் பணி கள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. இதில் கெல்லிஸ் வரையி லான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் நிறை வடைந்துள்ளன. சுரங்கம் தோண்டும் பணியில் ஈடு படுத்தப்பட்டிருந்த கல்வராயன் இயந்திரம் அயனாவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 867 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு செவ்வா யன்று (மே 13) பெரம்பூர் நிலை யத்தை வந்தடைந்தது. அயனாவரம் மற்றும் பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரி வாகும். பெரம்பூர் ரயில்வே நிலை யத்தின் பாதைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்லும்போது பெரும் சவால்களை எதிர்கொண்டது. 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர் கொண்டு, மக்களுக்கு எந்த பிரச்ச னையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது. மேலும் ஆழ்துளை கிணறுகள் சேத மடைந்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு களும் செய்யப்பட்டன. இந்நிகழ்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் டாடா ப்ரொ ஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.