கலாஷேத்ரா கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் திங்கள்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உத்தரவு.
சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது கல்லூரில் விசாரணை குழு அமைத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த மாநில மகளிர் ஆணைய தவர் குமாரி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இதில் 100க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் புகார் அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆய்வின் போது கல்லூரி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் அங்கு இல்லாததால் திங்கட்கிழமை அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவு