tamilnadu

img

முடிவுக்கு வருகிறது மோடி ஆட்டம்

விழுப்புரம், ஏப்.12- இந்தியா கூட்டணி அதிக இடங் களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வருகிற ஜூன் 4 ஆம் தேதியோடு பிரதமர் மோடியின் ஆட்டம் அனைத்தும் முடிக்கு வந்து விடும் என்று கே. பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி யின் விசிக வேட்பாளர் துரை. ரவிக் குமாரை ஆதரித்து கண்டாச்சிபுரத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரை யாற்றிய மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “ கிராமப்புற ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் 100 நாள் வேலையாகும். இதை 32 நாட்களாக குறைந்திருக்கும் பிரதமர் மோடிக்கு மீண்டும் வாக் களித்தால், 100 நாள் வேலை திட்டத் தை அடியோடு ஒழித்து கட்டிவிடு வார். ஏழை மக்களின் வயிற்றில் மண் அள்ளிப் போடும் மோடியின் ஆட்சி க்கு முடிவுரை எழுத வேண்டும்” என்றார். எதிர்க்கட்சிகளை பழி வாங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக தப்பி தவறிக் கூட மீண்டும் ஆட்சிக்கு  வந்துவிடக்கூடாது.

அப்படி வரும் நிலை ஏற்பட்டால் நாட்டையே சிறைக் கூடமாக மாற்றி விடுவார்கள். எனவே, நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்க ளை மூன்றாம் தர மக்களாக கூட மதிக்காத வர்ணாசிரம அதர்மத்தை தூக்கிப் பிடிக்கும் பாஜக கட்சி யோடு கூட்டணி சேர்ந்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த அதிமுக ஆகிய இரண்டு கட்சி வேட்பாளர்கள் இந்த  தொகுதியில் டெபாசிட் இழக்க வேண்டும்.

அதற்கு, அனைவரும் பானை சின்னத்தில் வாக்களித்து ரவிக்குமாரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போது தான், ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணி முடிக்கும் போது மோடி யின் ஆட்டம் முடிவுக்கு வரும், பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடி யும்” என்றும் கே. பாலகிருஷ்ணன் கூறினார். இந்த கூட்டத்திற்கு வட்டச் செய லாளர் எஸ்.கணபதி தலைமை தாங்கி னார். உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி, சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர்  பா. ஜான்சிராணி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், சிபிஐ சார்பில் ஆ.சவுரிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.