சென்னை, மார்ச் 12- மணிப்பூரைப் போல் ஒட்டுமொத்த இந்தியாவை யும் கலவர பூமியாக மாற் றவே அவசர அவசரமாக சிஏஏ சட்டம் கொண்டு வரப்ப ட்டுள்ளது என்று சென்னை யில் நடைபெற்ற கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் சாடி னார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “பாசி சத்தை வீழ்த்துவோம், நாட்டைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவிக நகரில் பகுதிச் செயலாளர் வி.செல் வராஜ் தலைமையில் திங்க ளன்று (மார்ச் 11) நடை பெற்றது.
இதில் கலந்து கொண்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசு கையில், “கடும் மழை வெள்ளத்தால் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போது, தமிழ் நாடு பக்கமே எட்டிப் பார்க்காத மோடி, வெள்ள நிவாரண நிதியை வழங்காத மோடி தற்போது தேர்தல் வந்தவுடன் மாதத்திற்கு 4 முறை வருகிறார். தேர்தல் முடியும் வரை இங்கேயே குடியிருப்பார் போலி ருக்கிறது. வட இந்தியாவில் தோற்று விடுவோம் என்ற அச்சத்தால் தென் இந்தி யாவை நோக்கி படை யெடுக்கிறாரோ என்ற சந்தே கம் எழுகிறது. எத்தனை முறை இங்கு வந்தாலும் பாஜக ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாது” என்றார்.
“கடந்த 10 ஆண்டுகளில் ஒரு பொதுத்துறை நிறு வனத்தைக் கூட உருவாக் காத மோடி அரசு, இருக்கும் பொதுத்துறை நிறுவனங் களையும், அதன் நிலங்களை யும், சொத்துக்களையும் அம் பானி, அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சுட்டிக்காட்டிய அவர், மது ரையில் ரயில்வே சொத்துக் களை விற்க அனுமதிக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எமது நாடாளுமன்ற உறுப்பினரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
அவசர அவசரமாக சிஏஏ - ஏன்?
மேலும் அவர் பேசுகை யில், “அவசர அவசரமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை இப்போது அம லுக்கு கொண்டு வந்துள் ளனர். இதைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மை மக்க ளுக்கும் இடையே ஒரு மோதலை உருவாக்கி அதன் மூலம் பெரும்பான்மை மக்க ளின் வாக்குகளை பெறலாம் என நினைக்கிறார்கள். பலர் இந்த சட்டம் வந்தால் சிறுபான்மை மக்கள் மட்டும்தான் பாதிக்கப்படு வார்கள் என்று கருது கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. பெரும் பான்மை மக்களும் பாதிக் கப்படுவார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அவர்கள் கேட்கும் ஆவணங்கள் இல்லை என்றால் குடியுரிமை மறுக்க ப்படும் அபாயம் உள்ளது” என்று விவரித்தார்.
மணிப்பூரில் எப்படி இரண்டு குழுக்களிடையே மோதலை உருவாக்கி கல வர பூமியாக மாற்றி னார்களோ, அப்படி நாடு முழுவதும் கலவர பூமியாக மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் குடியு ரிமை திருத்தச் சட்டம் என்று குறிப்பிட்ட கே.பாலகிருஷ் ணன், இதுவரை நாடாளு மன்ற வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திட்ட மிட்டு 143 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து விட்டு, 19 மசோதாக்களை எந்த விவா தமும் இன்றி நிறைவேற்றி னார்கள். அதில் ஒரு மசோதா தபால் திருத்த மசோதா. இதற்கு முன் ஒருவருக்கு வரும் கடிதத்தை யாரும் பிரித்து படிக்கக் கூடாது என்ற சட்டம் இருந்தது. ஆனால் இந்த புதிய மசோதா எல்லோருடைய எல்லா கடிதத்தையும் படிப்ப தற்கு அரசுக்கு உரிமை உள்ளது என்று கூறுகிறது. இதன்மூலம் மோடி அரசு தனிமனித உரிமையையும் பறித்துள்ளது என்றும் கூறி னார்.
இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.ஜெய ராமன், எஸ்.பாக்கியம் ஆகி யோரும் பேசினர். திருவிக நகர் பகுதிக்குழு உறுப்பி னர் எம்.சுப்பிரமணி வர வேற்றார். பா.தேவி நன்றி கூறினார். முன்னதாக வட சென்னை மாவட்டக் குழு சார்பில் தேர்தல் நிதி 52 லட்சத்து 18 ஆயிரத்து 555 ரூபாயை மாவட்டச் செய லாளர் எல்.சுந்தரராஜன் வழங்க மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் டி.கே. சண்முகம், மா.பூபாலன், கே.எஸ்.கார்த்திஷ்குமார், எல்.பி.சரவணத்தமிழன், எஸ்.ராணி, ஆர்.லோகநா தன், வி.ஜானகிராமன், அ. விஜயகுமார் உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.