tamilnadu

img

கொரோனாவால் ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் மரணம் கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

 சென்னை, ஜூன் 27- கொரோனா தொற்றால் ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் காலமானதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (சனிக்கிழமை) உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திலும்  மக்க ளுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன். அவரை இழந்து வாடும் அவரது மனைவி, குடும்பத்தார் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் மிகுந்த எச்ச ரிக்கையோடு பணியாற்ற வேண்டும். ஊடகத் துறையில் பணியாற்றுகின்ற அனைவருக்கும் அவர்கள் சார்ந்த நிறு வனமும், அரசும் உரிய நோய்த் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

;