tamilnadu

வாகன விபத்தில் இருவர் பலி

காஞ்சிபுரம்,ஏப்.22வேலூர் மாவட்டம் பெரும்புலி பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் வயது-28 இவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரும் இவரது நண்பருமான வாசுதேவன் வயசு 23 இருவரும் இருசக்கர வாகனத்தில் பெரும்புலி பாக்கம் கிராமத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது காஞ்சிபுரம் அருகே உள்ள சித்தேரி பகுதியில் சித்தேரி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த எம் சாண்ட் மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகினர். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்களின் தகவலின்பேரில் காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியிருந்தனர். உடலை கைப்பற்றிய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

;