tamilnadu

img

ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து

சென்னை, மார்ச் 2-  குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு, ஒன்றிய பாஜக அரசு,  தற்காலிக சர்வதேச அந்தஸ்து வழங்  கிய விவகாரம் கடுமையான விமர்சனங்  களுக்கு உள்ளாகி இருக்கிறது.

தற்காலிகமோ - நிரந்தரமோ, பல  ஆண்டுகளாக போராடியும் மதுரை  விமான நிலையத்திற்கு வழங்கப்படாத  சர்வதேச அந்தஸ்து, ஜாம்நகர் விமான  நிலையத்திற்கு மட்டும் வழங்கப்பட்டது எப்படி? என்று பலரும் கேள்விகளை எழுப்பத் துவங்கியுள்ளனர்.

பிரதமர் மோடியின்  எஜமான விசுவாசம்
நவீன இந்தியாவை, மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலக்கி, சாதி, மதம், மொழி அடிப்படையில் பிளவுபடுத்தி, மீண்டும்  பழமைவாதத்தை நோக்கித் திருப்ப வேண்டும்; மறுபுறம் பெரும் பணக்காரர்கள் எந்தவித தடையுமின்றி இந்த நாட்டின் மக்களை, வளங்களை சுரண்டுவதற்கு ஏற்ப சட்ட - திட்டங்  களை மாற்றியமைக்க வேண்டும் என்ப தற்காகவே பிரதமர் ஆக்கப்பட்டவர் தான் நரேந்திர மோடி. அவரும் ஆட்சி யேற்ற நாள் முதல், அதனை கனகச்சி தமாக செய்து வருகிறார். 

2014-இல் உலக பணக்காரர் வரிசை யில் 609-ஆவது இடத்தில் இருந்த அதானி, இந்த 10 ஆண்டுகளில் உலகின் 3-ஆவது பணக்காரர் என்ற இடத்திற்கு முன்னேறுகிறார் என்றால், அதிலிருந்தே மோடியின் முதலாளிகள் ‘சேவையை’ அறிய லாம்.

இந்நிலையில்தான், நாளொன்று க்கு 6 விமானங்கள் மட்டுமே வந்து செல்லும்  குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கி, மற்றொரு முதலாளியான அம்பானிக்கு தனது எஜமான விசுவாசத்தைக் காட்டி யுள்ளார்.

இரண்டு முதலாளிகள் வீட்டுக் கல்யாணம்
இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரும், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ முதலாளியுமான முகேஷ் அம்பானியின் இளைய மக னான ஆனந்த் அம்பானிக்கு ஜூலை மாதம், மும்பையில் திருமணம் நடக்க  உள்ளது. என்கோர் ஹெல்த்கேர் (Encore Healthcare) மருந்து நிறுவ னத்தின் தலைமை செயல் அதிகாரி வைரன் மெர்ச்சண்டின் இளைய மக ளான ராதிகா மெர்ச்சண்டை ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொள்ள உள்ளார். 

அதற்கு முன்பாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த 2 நாட்களாகவே தொடங்கி நடை பெற்று வருகின்றன. கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக இசை, நடனம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க உலகின் முன்னணி அரசி யல் தலைவர்கள், பெருமுதலாளி கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஜாம் நகர் வந்த வண்ணம் உள்ளனர்.

ஜாம் நகரில் குவிந்த  உலகப் பணக்காரர்கள்
குறிப்பாக சொல்ல வேண்டுமா னால், உலகின் முன்னணி பணக்கா ரர்களான பில் கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க், பாடகியும் தொழிலதி பருமான ரிஹானா, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் மக ளும் தொழிலதிபருமான இவாங்கா  டிரம்ப் உள்ளிட்டவர்கள் ஜாம்நக ருக்கு வருகை புரிந்துள்ளனர்.

இவ்வாறு உலகின் பெருமுத லாளிகள் பலரும் வருவதால், அவர்களுக்காக 10 நாட்களுக்கு ஜாம்நகர் விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, ஒன்றிய பாஜக அரசு தனது எஜமான விசுவாசத்தை வாலை யாட்டிக் காட்டியுள்ளது. பிப்ரவரி 25 துவங்கி மார்ச் 5 வரை, ஜாம்நகர் விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களை தரையிறக்க அனு மதி வழங்கியுள்ளது.

ஏற்பாடுகளில் களமிறங்கிய 3 ஒன்றிய அமைச்சகங்கள்

அதுமட்டுமன்றி, அம்பானி வீட்டு திருமணத்திற்கு வரும் முதலாளிகளை மகிழ்விப்பதற்காக வே, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம்,  நிதித்துறை அமைச்சகம், உள்துறை அமைச்ச கம் ஜரூராக செயல்பட்டு, ஜாம்நகர் விமான நிலையத்தில் பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வந்த ஜாம்நகர் விமான நிலையத்தில், வணிக விமானங்கள் அனுமதிக்கப்படும் என்று அறிவித்து, இதற்காக, அங்கு பயணிகள் முனைய கட்டடத்தையும் இந்திய விமான நிலைய ஆணையம் கட்டி யுள்ளது. அதுமட்டுமல்ல, அம்பானி வீட்டு திருமணத்திற்காக அதி முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப பகுதிகளில் விமானங்க ளை (ஒரே நேரத்தில் மூன்று விமா னங்களை) தரையிறக்கவும் இந்திய விமானப்படை அனுமதி வழங்கி யுள்ளது. 

ஜாம்நகர் விமான நிலையமானது, 6 விமானங்கள் மட்டுமே வந்து செல்லக் கூடியதாகும். ஆனால், வெள்ளிக்கிழமை மட்டும் 140 விமானங்கள் வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. 

அம்பானி வீட்டு திருமணத்திற்கு அதிக எண்ணிக்கையில் விருந்தி னர்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பயணிகள் கட்ட டத்தை 475 சதுர மீட்டரில் இருந்து 900 சதுர மீட்டராக இந்திய விமான நிலைய ஆணையம் விரிவாக்கம் செய்துள்ளது. விரிவாக்க பணிகள், முன்பே திட்டமிட்ட போதிலும், தற்போது அது விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.

மோடி அரசின் இந்த எஜமான சேவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
 

எங்கள் கோரிக்கையை இதுவரை ஏற்காதது ஏன்?

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், மதுரை மக்கள வைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் (சிபிஎம்), விமான நிலை யம் அமைந்திருக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் உறுப்பி னர் ப. மாணிக்கம் தாகூர் ஆகியோர் தங்களின் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

“மோடி அரசின் மெகா ‘மொய்’  என்று தலைப்பிட்டு ‘எக்ஸ்’ பக் கத்தில் கருத்துப் பதிவிட்டிருக்கும் சு.  வெங்கடேசன் எம்.பி., “முகேஷ் அம்  பானியின் மகன் ஆனந்த் அம்பானி  திருமண விருந்துக்காக ஜாம் நகர்  விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்  தஸ்து. 6 விமானங்கள் இறங்கி ஏறு கிற இடத்தில் 140 விமான சேவைக்கு  ஏற்பாடு. ஆனால் மதுரையின் பல  ஆண்டு சர்வதேச விமான நிலையக்  கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடே றவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு  4-ஆவது சர்வதேச விமான நிலை யம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள் (ஒன்றிய பாஜக  அரசு).” என்று சு.வெங்கடேசன்  எம்.பி., சாடியுள்ளார்.

பாகுபாட்டின் உச்சம் இது; தமிழகத்திற்கு நியாயம் வேண்டும்
“பிரதமர் மோடி அவர்களே, 10 நாள் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படுகிறது.  ஆனால், பல ஆண்டுகளாக கேட்டும், மதுரை விமான நிலையம்  இன்னும் சர்வதேச அந்தஸ்துக்காக  காத்திருக்கிறது. பாகுபாடு உச்சத் தில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பாகு பாட்டை நிறுத்துங்கள்” என மாணிக்  கம் தாகூர் எம்.பி. தனது ‘எக்ஸ்’ பக்  கத்தில் பதிவிட்டுள்ளார்.