tamilnadu

img

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து


தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட 1564 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 
வரும் ஜூன் மாத இறுதியில் ஆசிரியர்கள் பணிமாறுதல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ  போராட்டத்தில் ஈடுபட்ட 17 பி நோட்டீஸ் அனுப்பப்பட்ட 1564 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான பெயர் பதவி மூப்பு பட்டியலில் இடம் பெறாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாடவாரியான 4 ஆயிரத்து 1 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 
 

;