சென்னை,நவ.24- திட்டக்குடியில் நாளொன் றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரி க்கும் தொழிற்சாலை ரூ.33 கோடியில் நபார்டு கடனுதவி யுடன் நிறுவுவதற்கு நிர்வாக ஒப்பு தல் அளித்து தமிழ்நாடு அரசு அர சாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
கடலூர் மாவட்டம், திட்டக் குடியில் அமையவிருக்கும் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையின் மூலம் கடலூர், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருச்சி, சேலம், காஞ்சி புரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஒன்றியங்கள் மற்றும் பிற ஒன்றியங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு உகந்த தரமான கால்நடைத் தீவனம் வழங்கப்படும்.
மாவட்ட ஒன்றியங்களுக்கு தடையின்றி சமச்சீர் கால்நடை தீவனம் வழங்கப்படுவதை உறுதி செய்து தரமான கால்நடை தீவனம் வழங்கப்படும். இதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க செய்வ தும் இத்திட்டத்தின் நோக்க மாகும்.
மேலும் ஆற்றல் திறன், பசுமை தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கார்பன் மாசைக் குறைக்க செய்வதும் இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.