tamilnadu

img

தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினராக இஸ்ரோ விஞ்ஞானி நியமனம்!

தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உட்பட 4 பேரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்கான புதிய திட்டங்களை வகுப்பதற்கும், புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கும், பேராசியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்கும் உயர்கல்வி மன்றம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக 4 பேரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் கோ.பன்னீர்செல்வம், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் சி.இ.ஓ முரளிதரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகர் ஆகியோர் உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.