tamilnadu

img

ஐஎஸ் தீவிரவாத வழக்கு: 6 பேருக்கு தண்டனை முதல் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

கொச்சி, நவ. 28- கண்ணூர் மாவட்டம் கன கமலா தீவிரவாத வழக்கில்  குற்றவாளிகளாக அறிவி க்கப்பட்ட ஆறு பேருக்கு கொச்சி என்ஐஏ நீதிமன்றம் புதனன்று தண்டனை வழ ங்கி தீர்ப்பளித்தது. முதல் குற்றவாளி மன்சீத் என்கிற உமர் அல்ஹிந்திக்கு 14  ஆண்டுகள் சிறையும் அப ராதமும் விதிக்கப்பட்டு ள்ளது. யூசுப் பிலால் என்கிற டி.சாலிக் முகம்முதுவுக்கு 10  ஆண்டுகள், கோவையைச் சேர்ந்த ரஷீத் என்கிற அபு  பஷீனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க ப்பட்டது. சஹ்வானுக்கு 8  ஆண்டுகள், பி.கே.மொய்தீ னுக்கு 3 ஆண்டுகளும் சிறைத்  தண்டனை விதிக்கப்பட்டது. அனைவருக்கும் அப ராதமும் விதிக்கப்பட்டது.     கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கனகமலா என்னு மிடத்தில் தீவிரவாத அமை ப்பான இஸ்லாமிக் ஸ்டேட்ஸ்  அமைப்புக்கு ஆதரவான ரகசிய கூட்டம் நடத்தியதாக தேசிய விசாரணை அமைப்பு  (என்ஐஏ) இரண்டு குற்றப்ப த்திரங்களை கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆறுபேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவி த்தது. அவர்கள் மீது யுஏபிஏ சட்டத்தின் படியும், சதித்தி ட்டம் தீட்டியதாக ஐபிசியின் 120ஆம் பிரிவின் படியும் சாட்டப்பட்டிருந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. இவ ர்களில் ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்களாக யாரும் கண்டறியப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரில் ஏழாவது நபர் தலை மறைவாக உள்ளார். 2016 அக்டோபரில் கன கமலயில் ஐஎஸ் ஆதரவு ரகசிய கூட்டம் நடத்தி தீவிர வாத செயல்களுக்கு திட்ட மிட்டதாக வழக்கு தொடு க்கப்பட்டது. கலவர நோ க்கத்துடன் அனைத்து மத ங்களிலும் வழிபாட்டு த்தலங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது நீதிமன்ற த்தில் நிரூபணமானது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், காவ ல்துறையின் உயர் அதிகா ரிகள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பது உள்ளிட்ட குற்ற ச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 70 சாட்சியங்கள் பெற ப்பட்டன.  கொடைக்கானலில் விடுமுறைக்கு வரும் யூத ர்கள் மீது தாக்குதல் நடத்த  திட்டமிட்டதற்கான சான்று களும் நீதிமன்றத்தில் தக்கல் செய்யப்பட்டிருந்தன.