tamilnadu

img

ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

பல்வேறு  ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை,
தமிழகம் முழுவதும் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
மாற்றப்பட்ட அதிகாரிகளும் அவர்கள் தற்போது வகித்துவரும் பதவியும்:

1.நெல்லை காவல் ஆணையராகப் பதவி வகிக்கும் என்.பாஸ்கரன் சென்னை செயலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
2. படிப்புக்காக விடுப்பில் சென்று பணிக்குத் திரும்பியுள்ள தீபக்.எம்.தாமோர் நெல்லை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
3. சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய உதவித் தலைவர்(ஏஐஜி) பணியில் இருந்த ரங்கராஜன் மாற்றப்பட்டு சென்னை சிபிசிஐடி-3 எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சென்னை சிபிசிஐடி-3 எஸ்பி நிஷா பார்த்திபன் மாற்றப்பட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் மாற்றப்பட்டு திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. கயல்விழி உளுந்தூர்பேட்டை, தமிழ்நாடு சிறப்புக்காவல்படை 10-வது பட்டாலியன் கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

;