ஜனவரி 8 பொதுவேலை நிறுத்தத்தை ஆதரித்து காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் கோட்டம் 1ன் சார்பில் சென்னை எல்ஐசி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டம்1ன் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமையில் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார், தென்மண்டல பொதுச்செயலாளர் டி.செந்தில்குமார், துணைத்தலைவர் கே.எஸ்.சுவாமிநாதன், இணைச்செயலாளர் ஆர்.கே.கோபிநாத், கே.ஸ்ரீதர், எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.