tamilnadu

அத்தியாவசியமற்ற சேவைகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்தல் சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை, ஜூலை 11- அத்தியாவசியமற்ற சேவைகளை நிறுத்தி வைக்க வங்கிகளுக்கு பெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள் ளார். சோழிங்கநல்லூர் மண்ட லம், ஈஞ்சம்பாக்கம் நகர்புற  சமுதாய நல மருத்துவ மனையில் அமைக்கப் பட்டுள்ள இலவச டயாலி சிஸ் மையத்தை ஆணையர்  பிரகாஷ் திறந்து வைத்தார்.  இதன்பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: அனைத்து நகர்புற  சமுதாய நல மருத்துவமனை களிலும் இலவச டயாலசிஸ் மையம் அமைக்க வேண்டும்  என்பது அரசின் முடிவு. அதன்படி, 6வதாக ஈஞ்சம்  பாக்கத்தில் அமைக்கப் பட்டுள்ளது. சென்னையில் 75 முதல் 80 சதவீதத்தினர் மட்டுமே முகக்கவசம் அணி கின்றனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடித்தால்தான் தொற்று பரவலை கட்டுப்ப டுத்த முடியும். காய்கறி சந்தைகளில்  தனிமனித இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதனடிப்படை யில், சந்தைகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி மற்றும் சந்தை நிர்வாகிகள் இணைந்து செயல்படுகிறார்கள். வங்கிகளில் அத்தியா வசியமற்ற சேவைகளை நிறுத்தி வைக்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு விரை வில் பிறப்பிக்கப்படும். மக்கள் வங்கிக்கு வருவதை தவிர்க்க நீண்ட காலத்திற்கு இந்த உத்தரவை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம். கர்ப்பிணி பெண்க ளுக்கு, பிரசவ நாள் குறிக்கப்  பட்ட 15 தினங்களுக்கு முன்பாக கொரோனா பரி சோதனை செய்யப்படுகிறது. தெருக்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டு கட்டுப்ப டுத்தப்பட்ட பகுதிகளாக  மாற்றுவது நிறுத்தப்பட்டுள் ளன. ஒரு தெருவில் மூன்று  வீடுகளுக்கு மேல் தொற்று  பாதிப்பு உறுதி செய்யப் பட்டால்தான் அந்த தெரு  முழுவதுமாக மூடப்படு கிறது. இவ்வாறு அவர் கூறி னார்.