ஒ ன்றிய அரசின் வலியுறுத்தலுக்கு ஏற்ப ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மீட்டர் பொருத்துவதற்கான டெண்டரைக் கோரியுள்ளது.
ஒன்றிய அரசு இக்காலத்தில் மின்துறையில் தனி யாரை ஊக்குவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மின்சார திருத்த மசோதா 2023-ஐ கொண்டு வந்துள் ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இம் மசோதா நிலைக்குழுவிற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. எனினும் இந்த மசோதா எந்த நேரத்தி லும் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் ஆபத்து உள்ளது. இச்சட்டம் நிறைவேறும் பட்சத்தில் மின் உற்பத்தியில் மட்டுமன்றி விநியோகத்திலும் தனியார் துறை ஈடுபடுத்தப்படும்.
ஏற்கனவே, தமிழகத்தில் 23,53,000 விவசாய மின் மோட்டார்களுக்கு இலவச மின் இணைப்பும், வீடுகளுக்கு 100 யூனிட், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கு இலவச மின்சாரம் நடை முறையில் உள்ளது. ஒன்றிய அரசின் மின்சார திருத்த சட்டம் 2023 அமலாக்கும் போது மின்துறை தனியார் மயமாகும் சூழலில் மேற்கண்ட சலுகைகள் அனைத்தையும் தமிழகம் இழக்கும் சூழல் ஏற்படும்.
இந்நிலையில் தமிழக அரசு மின்வாரியத்தில் பழைய மீட்டர்களை அகற்றி புதிதாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் கோரியுள்ளது. இதில் மீட்டர் மாற்றி பொருத்த 3000 கோடி ரூபாய் தேவை. இது தவிர தமிழக மின்வாரியத்திற்கு 1,60,000 கோடி கடன் உள்ளது. மாநில அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தா விட்டால், தான் வழங்கும் மானியத்தை கொடுக்க முடியாது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளம் ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தை நிராகரித்து அம்மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமலாக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. எனவே, தமிழக அரசும் ஒன்றிய அரசின் நிர்ப் பந்தத்தை நிராகரித்து, தமிழக மின்துறையை பாது காத்திடவும், ஏற்கனவே தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறி தொழில்களுக்கு இலவச மின்சாரம் சலுகைகள் போன்ற உரிமை களை பாதுகாத்திட ஸ்மார்ட் மீட்டர் என்கிற பிரிபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து...