அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய நில மோசடி வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கின் முக்கிய நபரான பிரவின் ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று கைது செய்யப்பட்டனர். அதையடுத்து அவரை கரூர் அழைத்து வந்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து, விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவின் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடந்தையாக இருந்த சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருதிவிராஜை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.