கள்ளக்குறிச்சி, ஜூலை 25- விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக் குறிச்சி மாவட்டம் கடந்த ஜனவரி 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளி யிடப்பட்டது. வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களை பிரிப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடை பெற்றது. இதையடுத்து தமிழகத்தில் 33ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதய மானதைத் தொடர்ந்து மாவட்ட எல்லை வரை யறுப்பது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட் டத்திற்கான தனி அதிகாரியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செய லாளராக பணியாற்றிவந்த கிரண்குராலாவை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளன. இதற்கான பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள கிரண்குராலா கள்ளக் குறிச்சிக்கு வந்திருந்து, சார் ஆட்சியர் ஸ்ரீகாந்தை சந்தித்தார். பின்னர் தனி அதி காரிக்கான அலுவலக இடம் தேர்வு தொடர் பாக கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்ப னைக் கூடம், கள்ளக்குறிச்சி நகராட்சி, பொதுப்பணித்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உலகங்காத்தான் டெக்ஸ்டைல் மில், பெருவங்கூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அலுவலகம் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். இதுதொடர்பாக கிரண்குராலாவிடம் கேட்டபோது, தற்போது அலுவலகத்திற்கான இடம் குறித்து பார்வையிட்டு வருவதாகவும், ஓரிரு நாளில் தேர்வு செய்தபின் மற்ற பணிகள் துவங்கும் என்றார்.