tamilnadu

img

திமிரி ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு தடுப்பணை கட்டுமானப் பணிகள் ஆய்வு

திமிரி ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் அணைக்கட்டு தடுப்பணை கட்டுமானப் பணிகள் ஆய்வு

ராணிப்பேட்டை, மே 13 -  கலவை வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம், வாழைப்பந்தல் கிராமம் அருகே கமண்டல நாகநதி ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறையின் சார்பில் நபார்டு நிதியுதவியின் கீழ் ரூ.14.98 கோடியில் புதிய அணைக்கட்டு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் செவ்வா யன்று (மே13) கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம், புங்கனூர் ஊராட்சி வெள்ளகுளம் கிராமம் பகுதியில் தேவதாசி மலை மற்றும் வீர கட்டளை மலைகளுக்கு இடையே நபார்டு நிதியுதவியின் கீழ் ரூ. 6.50 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், வட்டாட்சி யர்கள் சுரேஷ், பாக்கியலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் முனுசாமி, அம்பேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.