tamilnadu

img

கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடக்கம்

சென்னை, செப். 16- இந்த சமய அறநிலையத்துறை சார்பில் திருச்  செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, சமயபுரம் மாரியம்  மன், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்  களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும்  திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வியாழனன்று (செப்.16) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தற்போது இத்திட்டத்தில் 754 திருக்கோயில் களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வரு கிறது. முந்தைய காலகட்டங் களிலும் திருக் கோயில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இதனைப் பின்பற்றி கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின் பசியினை போக்கும் விதமாக  திருக்கோயில்கள் சார்பாக 44 லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம்  மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான  முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய,  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்  பட்டுள்ளது. தற்போது, பழநி தண்டாயுதபாணி, திருவரங்  கம் அரங்கநாதசுவாமி ஆகிய இரண்டு திருக்கோயில்  களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்  படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விரிவுப் படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தால்  நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்ன தானத் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி  முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;