சென்னை, மார்ச் 16- ‘கருவுறாமைக்கான கார ணங்களை கண்டறிவதற்கான புதிய மற்றும் மேம்பட்ட வழி முறைகள் மற்றும் சிகிச்சை,” என்ற தலைப்பில் டாக்டர். உமா ராம் சிறப்புரையாற்றினார். சென்னையில் நியூபெர்க் டயாக்னாஸ்டிக்ஸ் நோயறிதல் மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில் ராயப்பேட்டை சீதாபாதி கிளினிக் மற்றும் மருத்து வமனையின் இயக்குநரும், மகப்பேறு மற்றும் மகளிர் நோயி யலின் சிறப்பு மருத்துவருமான டாக்டர். உமா ராம் பேசுகையில், மலட்டுத்தன்மை (கருவுறாமை) என்பது எப்படி ஒரு பாலி னத்திற்கு மட்டும் உரியதல்ல. ஒரு குழந்தையை கருத்தறிக்க இயலா மைக்கு ஆண் மற்றும் பெண் ஆகிய இரு நபர்களும் ஒரு இணை யில் சம அளவில் பொருப்பான வர்கள் என்றார்.
கருவுறாமைக்கு காரணங்கள்
தம்பதியினர் மத்தியில் கரு வுறாமை, மலட்டுத்தன்மை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக எப்படி இருக்கிறது என்று வலு வாக கோடிட்டுக்காட்டிய அவர், மனநலம் சார்ந்த மற்றும் உணர்வு ரீதியான துயரையும், சிக்கலையும் இது விளைவிக்கிறது என்று குறிப்பிட்டார். கருவுறாமைக்கு, மலட்டுத்தன்மைக்கு பங்களிப்பு செய்யும் காரணிகளாக இருக்கிற உடற்பருமன், நீரிழிவு, கர்ப்பப்பை யில் நீர்கட்டிகள் மற்றும் நார்த்தி சுகட்டிகள் போன்ற காரணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதி விரைவாக நிகழும் நகரமயமாக்க லின் காரணமாக கருவுறாமை நேர்வுகளின் எண்ணிக்கை வேக மாக எப்படி அதிகரித்து வரு கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டி னார். மன அழுத்தத்தின்கீழும், கடு மையான மாசு பிரச்சனை யின்கீழும் இக்காலத்தில் மக்கள் எப்படி பணியாற்ற வேண்டியி ருக்கிறது மற்றும் குழந்தை பெற்றுக்கொண்டு பெற்றோர் ஆவதை தள்ளிப்போடுகிற போக்கும் அதிகரித்து வருகிறது என்பது குறித்தும் அவர் விளக்க மளித்தார்.
ஆரோக்கியமான உணவுமுறைகள் அவசியம்
டாக்டர். உமா ராம் மேலும் பேசு கையில், கருவுறாமை என்பது அதிகமாக பேசப்படுகிற ஒரு வெளிப்படையான விஷயமல்ல. பல நேரங்களில் சமூக அவப் பெயரோடு இது இணைத்து பேசப் படுகிறது. எனவே இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதற்கான அவசியம் இருக்கிறது. உடற்பயிற்சி செய்தல், மதுபான நுகர்வின் அளவை குறைத்தல், புகைப் பிடித்தலை கைவிடுதல் மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை கொண்டிருத்தல் போன்ற சில வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்வதன் வழி யாகவும், கருவுறாமை, மலட்டுத் தன்மையை சரிசெய்யமுடியும். மலட்டுத்தன்மை பிரச்சனையுள்ள தம்பதியினருக்கு நவீன மருத்துவ மேம்பாடுகளும், கண்டுபிடிப்பு களும் உதவிவருகின்றன. ஒரு ஆண்டுக்கும் மேலாக முயற்சி செய்தும் கருத்தறிப்பதில் வெற்றி காண இயலாத நபர்கள் இது குறித்து ஒரு மருத்துவ நிபுணரை கலந்தாலோசிப்பது சிறப்பான பயனளிக்கும் என்பதே எனது ஆலோசனை என்றும் அவர் கூறி னார். நியூபெர்க் எர்லிச் நிறுவ னத்தின் தொழில்நுட்ப இயக்குந ரும், தலைமை நுண்ணுயிரியல் நிபுணருமான டாக்டர். சரண்யா நாராயண் பேசுகையில், கருவு றாமைக்கான காரணங்களும், ஆரம்ப நிலையிலேயே துல்லிய மாக கண்டறிவதற்கான அவசி யத்தை வலியுறுத்தினார். இப்பிரச் சனையை சிறப்பாக மேலாண்மை செய்வதை இது ஏது வாக்கும் மற்றும் கருவுறுதலுக்கான வெற்றி விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.