சென்னை:
தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை சனிக் கிழமை (ஆக.1) கொண்டாடினர்.பொதுவெளியில் தொழுகை நடத்த அனுமதி இல்லாததால் அவரவர் இல்லங்களில் தொழுகை நடத்தினர்.கொரோனா பாதிப்பால் ரமலான் பண்டிகை நேரத் தில் தராவிஹ் எனப்படும் இரவு நேர கூட்டுத் தொழுகை, பள்ளிவாசல்களில் நோன்பு திறப்பது உள்ளிட்டவற் றிற்குத் தடை விதிக்கப் பட்டது. பண்டிகை அன்று பொது இடத்தில், பள்ளிவாசல்களில் நடக்கும் சிறப்புத் தொழுகைக்கும் தடை விதிக்கப்பட்டு வீடுகளில் தொழுகை நடத்த அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனால் சிறப்புத் தொழுகை நடைபெறவில்லை. அவரவர் இல்லங் களில் தனியாக அல்லது மொட்டை மாடி உள்ளிட்ட இடங்களில் உறவினர்கள், நண்பர்கள் தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.