tamilnadu

img

இந்தியன் வங்கியின் நிகரலாபம் ரூ.322 கோடி வங்கியின் தலைவர் பத்மஜா சந்துரு தகவல்

சென்னை,மே 14பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி 2018-19 ஆம் நிதியாண்டில் கடந்த ஜனவரி முதல் மார்ச்வரையிலான கடைசி காலாண்டில் ரூ.131.98 கோடிநிகரலாபம் ஈட்டியுள்ளது. ஓட்டுமொத்த ஆண்டில் ரூ.322 கோடி நிகரலாபம் ஈட்டியுள்ளது.அதே நேரத்தில் கடந்த நிதியாண்டில் இதேகாலகட்டத்தில் பெற்றலாபத்தை விட ரூ.189.77 கோடி இழப்பை சந்தித்துள்ளது. சென்னையில் செவ்வாயன்று (மே 14) செய்தியாளர்களிடம் பேசிய வங்கியின் தலைவரும் தலைமை நிர்வாகஇயக்குநருமான பத்மஜாசந்துரு இதனை தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த அந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.5537.47 கோடியாக இருந்தது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.4954.21 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த நிகரலாபம் ரூ.320.93 கோடியாகும்.2018-19ல் மொத்த வருவாய் ரூ.21073.50 கோடியாக இருந்தது. 2017-18ல் இது ரூ.19531.91 கோடியாக இருந்தது. வட்டி மூலம் கிடைத்த வருவாய் ரூ.19,185 கோடியாகும். வங்கியின் மொத்த வாராக்கடன் 7.11 விழுக்காடாக சரிந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முடிவில் 7.37 விழுக்காடாக இருந்தது. வாராக்கடன் ரூ.1772.03 கோடியில் இருந்து ரூ.1432 கோடியாக குறைந்துள்ளது. செயல் லாபம் 2விழுக்காடு குறைந்து ரூ.4881 கோடியாக இருந்தது. செயல் லாபம் 8விழுக்காடு அதிகரித்துள்ளது.சமூகத்திற்கு சிறந்த சேவையாற்றியதற்காக அசோசேம் விருது 2018,விவசாயம், முன்னுரிமைதுறை கடன்கள் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான சிறந்த வங்கிக்கான விருது, வங்கி வாடிக்கையாளர்களிடம் நிதி சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கான நபார்டு விருது, மகளிர் சுய உதவிக்குழுவினரை வங்கியுடன் இணைக்கும் சிறந்த வங்கிக்கான தமிழக அரசின் விருதை தொடர்ந்து 10 வது ஆண்டாக இந்தியன் வங்கி பெற்றுள்ளதாகவும் பத்மஜா மேலும் கூறினார்.