வேண்டும். நோய் சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் சிகிச்சையை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளை அரசே ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், இதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு ஆகும் செலவுகளை அரசு நிதி அல்லது காப்பீட்டு திட்டம் மூலம் வழங்கிட வேண்டும்.
மருத்துவப் பணியாளர்களை நிரந்தர முறையில் தேர்வு செய்க!
தேவை பெருகி வருகிற சூழலில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். அரசு ஒப்பந்த முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தவிர்த்து தேவையான அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நிரந்தரமான முறையில்பணியமர்த்திட வேண்டும். ஏற்கனவே பணி நிரந்தரம் செய்யப்படாத அனைத்து செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும். மருத்துவத்துறை என்பது மக்களின் உயிர்காக்கும் முக்கியமான சேவைத்துறையாகும். எனவே, இத்துறைக்கு மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த முறையில் தேர்வு செய்யாமல் நிரந்தரப் பணி என்கிற முறையில் தேர்வு செய்திட வேண்டும்.
கொரோனா சிகிச்சை மட்டுமல்லாது மாநிலத்தில் இதர சுகாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தனியார் கட்டமைப்புகளையும் பயன்படுத்தினால் மட்டுமே தேவைக்கு ஈடு கொடுக்க முடியும். அனைத்து மருத்துவமனைகளையும் எந்த சுணக்கமும் இல்லாமல் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், முன் வரிசை சுகாதார ஊழியர்கள், காவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்ட பணப் பயன்கள் (Monetary Benefits) மற்றும் காப்பீடு போன்றவை இன்னும் வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இப்பணியின் நிமித்தம் உயிரிழக்க நேர்ந்தவர்களின் குடும்பத்தாருக்கு காப்பீட்டுத் தொகை ரூபாய் 50 லட்சமும், இழப்பீடு ரூபாய் 50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.
இணையதளம்-கால்சென்டர் வசதி ஏற்படுத்துக!
நோய் பாதிப்புள்ளவர்கள் மருத்துவ உதவிக்காக தொடர்பு கொள்ள அதிகாரிகளையும், அதற்கான தொடர்பு எண்களையும் அறிவிக்க வேண்டும். நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதை முற்றாக தடுப்பதற்கு இணையதளம் மற்றும் கால் சென்டர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சிகிச்சை மறுப்பு மற்றும் கட்டணக் கொள்ளை ஆகியவற்றை முற்றாகத் தடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு உடனடியாகவும், இலவசமாகவும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது நோய் தடுப்பிற்கு மிக அவசியமாகும்.
நோயாளிகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோருக்கும் மனநலன் காக்க ஆற்றுப்படுத்துதல் சேவையை திட்டமிட்டு ஆன்லைன் ஏற்பாட்டின் மூலம் வழங்க வேண்டும்.
செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள மத்திய அரசின் பொதுத்துறை தடுப்பூசி பூங்காவில் மருந்துகள் தயாரித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மத்திய - மாநில அரசுகள் இதற்கு அவசியமான ரூபாய் 250 கோடியை ஒதுக்கீடு செய்து உடனே பணிகளை தொடங்கிட வேண்டும்.
“டெஸ்ட் கிட்” களை தமிழகத்திலேயே தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “பிபிஇ” என்ற முழு உடற்பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் முதலியவற்றிற்கு விலைக் கட்டுபாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். விலை குறைவதற்கு ஏதுவாக ஜி.எஸ்.டி வரியை ஜீரோ சதவீதமாக அறிவிக்க வேண்டும்.
விரைவான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், உரிய காலத்தில் சிகிச்சை, விழிப்புணர்வு பிரச்சாரம், மனநல ஆலோசனைகள், பொருளாதார உதவிகள் என அனைத்தும் உள்ளடக்கிய மேற்சொன்ன நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படை
யில் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.