சென்னை:
தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கு அடிப்படைவாத அமைப்பினர் மற்றும் சமூக விரோத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு, உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை காவல்துறையினர் அதிகரித்துள்ளனர். முதலமைச்சருக்கு z பிளஸ் பாதுகாப்பு, எஸ்.பி.சி.ஐ.டி பிரிவு மற்றும் சென்னை காவல்துறை ஆகியவை மூலம் வீடு, அலுவலகம் மற்றும் கான்வாய்களில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், புதிதாக ஏற்பட்டுள்ள அச்சுறுத் தலை தடுக்கும் விதமாக தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.