சென்னை, ஜூலை 30 - தொழில்வரி, தொழில் உரிமக் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரி வித்து மாநகராட்சி கூட்டத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி யின் மாமன்றக் கூட்டம் செவ்வாயன்று (ஜூலை 30) ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடை பெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998ன்படி 5 ஆண்டுக்கு ஒரு முறை தொழில் வரி விகிதங்கள் திருத்தி அமைக்கலாம். 25 விழுக்காட்டிற்கு குறையாமலும், 35விழுக்காட்டிற்கு மிகாமலும் வரி விகிதம் இருக்க வேண்டும், தொழில் வரி விகிதம் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு கடைசியாக தொழில் வரி உயர்த்தப் பட்டது.
எனவே, தற்போது 35 விழுக்காடு தொழில் வரி உயர்த்தப்படுகிறது. இன்படி, தனிநபர் ஒருவருக்கு அரை யாண்டு வருமானம் 21 ஆயிரம் ரூபாய்க் குள் இருந்தால் வரி இல்லை. 21,000 - 30,000 வருமானம் இருந்தால் 135லிருந்து 180 ரூபாயாகவும், 30,001 - 45,000 வரை வருமானம் இருந்தால் 315லிருந்து 430 ரூபாயாகவும், 45,001 - 60,000 வரை வருமானம் இருந்தால் 690லிருந்து 930 ரூபாயாகவும் உயர்த்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழில் உரிமக் கட்டணம்
தொழில் உரிமக் கட்டணம் வணிக தன்மைக்கு ஏற்ப ரூ.30 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.500 ரூபாய் இருந்த தொழில் உரிம கட்டணமானது, மிக சிறிய வணிகம் ரூ.3,500 சிறிய வணிகம் 7 ஆயிரம் ரூபாய்; நடுத்தர வணிகம் 10ஆயிரம் ரூபாய்; பெரிய வணிகம் 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
பேக்கரி, மெடிக்கல் ஷாப், முடி திருத்த கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் வரையும், துணிக்கடை களுக்கு ரூ.15 ஆயிரம் ரூபாய் வரையும், சினிமா ஸ்டூடியோ, நகைக்கடை களுக்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய் வரையும் கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம், சிபிஐ எதிர்ப்பு
இந்த தீர்மானங்கள் விவாதத்திற்கு வந்தபோது சிபிஎம் குழுத்தலைவர் ஆர்.ஜெயராமன் குறுக்கிட்டு, அதிக ஊதியம் பெறுவோருக்கு அதி கம் வரி விதிக்க வேண்டும். குறை வான ஊதியம் பெறுவோருக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. தொழில் உரிமக்கட்டணம் 500 ரூபாயிலி ருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படு கிறது. எனவே, இரண்டு தீர்மானங் களை நிறுத்தி வைத்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த ஆணையர் குமரகுருபரன், மாநகராட்சி பணி களை மேற்கொள்ள வருவாய் தேவைப்படுகிறது. எனவே, வரி, கட்ட ணம் உயர்த்தப்படுகிறது என்றார். இதனை ஏற்க மறுத்த சிபிஎம், சிபிஐ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய ஆர்.ஜெயராமன், “அடித்தட்ட மக்கள் மீது வரியை அதிகமாக சுமத்துகின்றனர்.60ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஊதியம் வாங்குகிறவர்களுக்கு தொழில்வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் ஊதியம் வாங்குகிறவர்களுக்கு வரி உயர்த்தப்படவில்லை. கான்ட்ராக்ட், ஒப்பந்த தொழிலாளர்கள், என்யு எல்எம் தொழிலாளர்கள் மீது தொழில் வரி உயர்த்தப்படுகிறது.
பெட்டிக்கடை, சிறுகடைகள், 500 சதுர அடி பரப்பளவு கொண்ட கடை களுக்கு 500 ரூபாயிலிருந்து 5ஆயிரம் ரூபாயாக உயர்த்துகின்றனர். 15ஆயி ரம் ரூபாய் வரை கட்டணம் உயர்த்து கின்றனர். 1000 சதுர அடி உள்ள கடைகளுக்கு ரூ.50ஆயிரம் வரை நிர்ணயிக்கின்றனர். இது சரியானதல்ல.
ஆணையரின் பதில் ஏற்புடைய தல்ல. வசதியானவர்களுக்கு, கூடுதல் வருவாய் உள்ளவர்களுக்கு, முத லாளிகளுக்க லாபத்தின் மீது வரி போடு வதில் நியாயம் உள்ளது. அடி மட்ட தொழிலாளி, எளிய மக்கள் மீது வரியை உயர்த்துவது ஏற்புடைய தல்ல” என்றார்.