சென்னை, மே 11- தமிழகத்தில் மே 15 வரை பரவ லாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ள நிலையில், சனிக்கிழமை யன்று காலை 8.30 மணியுடன் முடி வடைந்த 24 மணி நேரத்தில் தமிழ கத்தில் பதிவான அதிகபட்ச மழை யளவு விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 10 செ.மீ., ஒகேனக்கல்லில் 8 செ.மீ., திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 7 செ.மீ., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருச்சி மாவட்டம் முசிறி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது.
அம்மாபேட்டை (ஈரோடு), பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), மேட்டுப்பட்டி, கள்ளந்திரி (மதுரை), தேவிமங்கலம் (திருச்சி), அப்பர் கூடலூர் (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்) ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, பெருங்க ளூரு, திருமயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தூத் துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மதுரை மாவட்டத்தின் புலிப் பட்டி, குப்பனம்பட்டி, பெரியபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், குமரி மாவட்டத்தின் சுருளகோடு, சிவ லோகம், சித்தாறு -2 மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், சேலம் மாவட்டத்தின் ஆனைமடுவு ஆகிய பகுதிகளில் 3 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.
மேற்கண்ட இடங்கள் மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலும் ஆங்காங்கே மிதமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.