சென்னை, ஜூன் 30- பள்ளிக்கல்வித் துறையில் இயக்குநர்கள் மூன்று பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநர் சி.உஷாராணி, அரசுத்தேர்வுகள் இயக்கக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வசுந்தரா தேவி ஓய்வு பெற்ற காரணத்தால் அந்தப் பதவிக்கு உஷாராணியை அரசு நியமித்துள்ளது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் மு.பழனிச்சாமி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு ள்ளார். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் என்.லதா தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.