tamilnadu

img

அக்டோபர் முதல் தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’

சென்னை:
தமிழகத்தில் அக்டோபர்  1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் எனஉணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் இந்த திட்டம் முதலில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், சோதனை அடிப்படையில் கடந்த பிப்ர வரி மாதம் அமல்படுத்தப் பட்டது.இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தமுடிவு செய்யப்பட்டது. இதனை தமிழக சட்டப் பேரவையில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ்அறிவித்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல்காரணமாக திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் அமல்படுத் தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை திட்டத்தின் மூலம், குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரேசன் கடையிலும் சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.குறிப்பாக ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

;