tamilnadu

img

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு 34,53,552 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழப்பு ஏதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38, 025 ஆக உள்ளது. இன்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,193 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நிலவரப்படி 334 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

;