tamilnadu

img

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,57,732 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 31,33,990 ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 40 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,218 ஆக உயர்ந்துள்ளது. 

;